Tuesday, September 22, 2009

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி!



நரேந்திர மோடி குஜராத் கிரிக்கெட் சங்கத்தலைவராகத் தேர்வு - செய்தி.


இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்புதானே... இதோ ஒரு கற்பனை.

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி

ஏற்கெனவே தன்னைவிட மேலானவராக மோடியை சொந்தக் கட்சிக்காரர்களே சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாள் அரசியலில் இருந்துவிட்டு ஒரு விளையாட்டுச்சங்கத்திற்குக் கூட தலைவராகவில்லையே என்று எதிர்கோஷ்டி பிரச்சனை எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக கால்பந்து சங்கத்திற்கு தலைவராகி விட்டார் அத்வானி. ராமர் கால்பந்து விளையாடிய இடங்களாகத் தேர்வு செய்து 108 இடங்களில் மசூதிகளும், சர்ச்சுகளும் எழுப்பப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். ஜின்னாவும், தானும் ஒருமுறை கால்பந்து ஆடியதை மிகவும் நெகிழ்ச்சியுடன் அத்வானி குறிப்பிட்டார்.
--------------

மாஜிக் கலைஞர்கள் சங்கத்தலைவராக பிரணாப்


நூறு நாளில் அதை வரவழைக்கிறேன், இதை வரவழைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே மக்களை மயக்கிய பிரணாப் முகர்ஜி மாஜிக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகியுள்ளார். வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டே தனது மாஜிக் தொப்பியிலிருந்து ஆட்குறைப்பு, பணிநீக்கம், சம்பள வெட்டு, விலைவாசி உயர்வு என்று அவர் எடுத்துவிடும்போது பிரமிப்பாகத்தான் இருக்கும். தன்னை விட புதிய தலைவர் நன்றாகவே ஏமாற்றுகிறார் என்று முன்னாள் தலைவரும், மாஜிக் கலைஞருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
----------------

கண்ணாமூச்சி விளையாட்டு சங்கத்திற்கு அழகிரி தலைவர்


தில்லியில் தனது துறை அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கையில், இதோ, இதோ என்று சொல்லிக்கொண்டே மதுரையிலேயே பதுங்கி தனது கண்ணாமூச்சித் திறமையை வெளிக்காட்டிய அழகிரி அந்த விளையாட்டின் நிர்வாகத்தையே எடுத்துக் கொண்டுள்ளார். தனது கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஐடியா கொடுத்தால் அவர்களுக்கு சங்கத்தில் பொறுப்பும் தரப்போகிறார். இதேபோல் கண்ணாமூச்சி காட்டிய முன்னாள் ஆட்டக்காரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். மறைந்து கொள்ளும் நேரத்தை நீட்டிக்கொள்வது எப்படி என்று கேட்கத்தான் அந்தத் தேடுதல்.

---------------
தடகளச் சங்கத்தலைவராக சு.சாமி முயற்சி

செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சனை பண்ணி விரட்டியடிக்கப்பட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் அனுபவத்தால் தடகளச் சங்கத்திற்கு தலைவராகலாம் என்று சுப்பிரமணிய சுவாமிக்கு ஆசை வந்துள்ளது. தனது ஆசை நிறைவேற ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் பாஜகவில் சேரப்போகிறார். காந்தஹார் வரை ஓடிய ஜஸ்வந்த்சிங் இல்லாததும், பேட்டி என்றால் ஓட்டமாய் ஓடும் வெங்கய்யா நாயுடு அடக்கி வாசிப்பதும் இந்தப்பதவிக்கு போட்டியிருக்காது என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

4 comments:

  1. See.. you are being partial again..... Why not extend your imagination to Prakash karat, Yechuri, Raja being chiefs of Pole Vault, Shooting, High jump, etc... ;)

    ReplyDelete
  2. Dear Gowri,

    Yes, I am partial. But for the better side. I am not HIDING behind.

    ReplyDelete
  3. "On the better side" ?? Well, the term "better" is always comparative and judgemental !! Judgements are always based on individual preception. Now comes the philosophical interesting part - what may look 'better' to you may look 'worse' to many others. If that is the case, we can NOT brand anybody as 'right' or 'wrong' - right ?? It may look to you that the person opposite to you is hiding behind a thin veil of curtain - but, from the other person' view, you are the one behind it - right? It is just the curtain that is in between and the preception changes totally. When you say that you are not hiding, you should also understand that no one is hiding out anywhere. By the way, 'partial' also means 'biased' and 'prejudiced'. That does not abode well for your profession, my friend.

    ReplyDelete
  4. Thanks Gowri for your philosophical writing. One need a political solution to solve the problems faced by the country. We have a programme to change that. Better you show the alternative to that. That will be healthy. If need, I can send our programme. This programme is not based on one individual perception. Almost nine lakh brains have put in their effort. We stand by that. And I am sure, at present, there is no other better alternative to that.

    ReplyDelete