Wednesday, September 9, 2009

கொலைகார (அமெரிக்க) மருத்துவர்கள்!


அமெரிக்க மத்தியப் புலனாய்வுக்குழு(சிஐஏ)வில் இணைந்து பணியாற்றும் மருத்துவர்கள் சித்திரவதை செய்யும் கொடுர செயல்களில் பெரும் பங்கு வகித்துள்ளார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்த ஆய்வை மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பு மேற்கொண்டது. 1977 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசை இந்த அமைப்பும் பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிஐஏவுடன் இணைந்து பணியாற்றிய மருத்துவர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களை செய்துள்ளார்கள் என்று இந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 31 அன்று இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் உத்தரவுப்படி வெளியாகியுள்ள சிஐஏயின் ரகசிய ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. "மேம்படுத்தப்பட்ட விசாரணை உத்திகள்" என்ற பெயரில் மருத்துவர்களையும் இணைத்துக் கொண்டு அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கொடுரமான சித்தரவதைகளை மேற்கொண்டுள்ளனர். சித்தரவதை உத்திகளை வடிவமைத்துக் கொடுத்து, அதை நடைமுறைப்படுத்திக் காட்டுவதோடு, எந்தளவுக்கு அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் மருத்துவர்களைக் கொண்டு கண்காணித்துள்ளார்கள். போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றால் உத்திகளைக் கடுமையாக்கும் வேலையும் மருத்துவர்களிடம் விடப்பட்டது.

நேர்மையற்ற முறையில் சட்டவிரோதமான செயல்களில் மருத்துவர்கள் எவ்வாறு இறங்கினார்கள் என்பதை சிஐஏயின் ரகசிய ஆவணங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. பொதுவாக, விசாரணையின்போது கைதிகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்காகவே மருத்துவர்களை அழைப்பது வழக்கம். ஆனால் எந்த அளவுக்கு சித்தரவதையை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதைத் தீர்மானிக்கவே அவர்கள் சித்தரவதையின்போதே நாற்காலி போட்டு அருகில் அமர்ந்து கொள்கிறார்கள். தலையிலிருந்து கழுத்துவரை உறை போட்டு மறைப்பது, உணவு தராமல் ஏமாற்றுவது, உடலோடு சேர்த்து துணியைக் கட்டிவிட்டு இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளச் செய்து அதை சுத்தம் செய்ய வாய்ப்பு தராமல் இருப்பது போன்ற கொடுரங்களை நிகழ்த்தச் செய்கிறார்கள். இந்த உத்தியெல்லாம் பழையதுதான். ஆனால் ஒரு கூண்டில் அடைத்து வைத்து செய்யச் சொல்லும் புதிய உத்தியை மருத்துவர்கள்தான் சிஐஏக்காரர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

அதோடு, ஒரே சமயத்தில் இரு கொடுமைகளைச் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று உயிர்களைக் காப்பாற்றுவதற்காக படித்துப் பட்டம் பெற்ற இந்த மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். அதோடு, ஒவ்வொரு கொடுர செயலுக்கும் எவ்வகையான விளைவு இருக்கும் என்றும் அந்த மருத்துவர்கள் ஆய்வு(!) செய்துள்ளார்கள். குறிப்பாக, கூண்டிற்குள் அடைத்து தலையிலிருந்து கழுத்துவரை துணியால் மூடிவிடுவதால் வாழ்க்கை குறித்த அச்சத்தை ஏற்படுத்த முடியும். உடல் ரீதியாக, மூச்சுவிடுவதை சிரமமாக்கும் என்பதைத்தவிர வேறு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் மனரீதியாகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கவனம் சிதறுதல், ஞாபக மறதி, வாய்விட்டு புலம்புதல், குழறும் பேச்சு, எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் தன்மை, அசாதாரண நடவடிக்கை மற்றும் தற்கொலையை நோக்கி செல்லுதல் போன்ற விளைவுகள் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுபவரிடம் ஏற்படுகின்றன என்கிறது அந்தக் கொடுர மருத்துவர்களின் குறிப்புகள். மனரீதியாக மட்டுமில்லாமல் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்த திரவ உணவை மட்டுமே தரும் பழக்கத்தை உண்டாக்கியுள்ளார்கள். உடல் ரீதியாக சக்தி இழக்கச்செய்து அதன் மூலம் கைதிகளை தங்கள் வழிக்கு வரவைக்கும் உத்தியாக இதைக் கையாண்டுள்ளார்கள்.

எவ்வளவு திடமானவராக இருந்தாலும், அவரைத் திணறச் செய்வதற்காக துணியைக் கட்டிவிட்டு அதிலேயே இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளச் செய்யும் முறையைக் கடைப்பிடித்துள்ளார்கள். 36 மணிநேரம் வரை இந்த சித்தரவதை நீடித்துள்ளது. சிறுநீரகக்கோளாறு, வயிற்றுப்புண், தோல்வியாதி போன்றவற்றை உருவாக்கி அதன் மூலம் கைதிகளை சோர்வடையச் செய்யும் உத்தியாக இதைக் கடைப்பிடித்துள்ளார்கள். சில சமயங்களில் துணியைக் கட்டிவிடாமல், நின்றுகொண்டே இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் மருத்துவர்களின் உதவியோடு நடந்திருக்கிறது. அதுசரி.. அமெரிக்க அரசு என்ன செய்யப்போகிறது? அதான் வெளியிட்டாச்சுல்ல... என்று கூறி விட்டு நகர்ந்துவிட்டது. அமெரிக்க மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் இன்னும் தெளிவாகவில்லை.

5 comments:

  1. மிக அற்புதமான அலசல். நல்ல கட்டுரை

    ReplyDelete
  2. அவசியமான பதிவு. தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை.

    ReplyDelete
  3. You read such things about America only because they are democratic enough to bring such things to public. Also, such news does not mean that 'comrades' in China and other Communist states does NOT resort to such tactics. Comrade, this happens in every country, including your friendly neighbour China !! It is just that America is more democratic than ANY of the left nations. Secondly, I suggest that if you wish to see only negative things - dont just restrict yourself to America and BJP (and ofcourse, now the Congress as well) !! :)

    ReplyDelete
  4. Dear Gowri,

    These atrocities are happening not in US. They are doing it in Iraq, Afghanistan and other places. I have left that very important point. It was my mistake. Just see my blog. I have not restricted myself into America and BJP. I have covered even "தாத்தாவுக்கு இறுதிசடங்கு செய்த சகோதரிகள்". I am concentrating more on these two, because in the work allotment in our newspaper I am supposed to do that. That is the reason.

    ReplyDelete
  5. And you very much like the area where you have been work allotted - dont you?? :)

    ReplyDelete