Thursday, September 3, 2009

தாத்தாவுக்கு இறுதிசடங்கு செய்த சகோதரிகள்!

உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் தங்கள் தாத்தாவுக்கு இறுதிச்சடங்கை செய்துள்ளார்கள்.

பாகல்பூரைச் சேர்ந்தவர்கள் ரிங்கு யாதவ்(வயது 27). அவருக்கு ரீமா மற்றும் அஞ்சு என்ற இரு தங்கைகள். 2005 ஆம் ஆண்டின் தங்கள் தந்தையை அவர்கள் இழந்தனர். அதற்குப்பிறகு தாயோடு தாத்தா வீட்டுக்கு சென்றார்கள். தாத்தா பகதூரின் பராமரிப்பில் அவர்கள் இருந்து வந்தார்கள். இவர்கள் தங்கள் தாத்தாவிடம் வந்து சேர்ந்தபிறகு தாத்தாவின் இரு சகோதரர்கள் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்று விட்டனர். பக்கத்தில் உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தனர்.

இந்நிலையில் 70 வயதான பகதூர் திடீரென்று மரணமடைந்தார். பக்கத்து கிராமத்தில் இருக்கும் அவருடைய சகோதரர்கள் இந்தச் செய்தி கிடைத்தபிறகும் வரவில்லை. அவருக்கு இறுதிச்சடங்குகளைச் செய்ய வேறு ஆண்கள் யாருமில்லை என்பதால் தாங்களே அதைச் செய்வது என்று மூன்று சகோதரிகளும் முடிவெடுத்தனர். கிராமத்தினர் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பகதூரின் சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுத்து சகோதரிகள் அழைத்து வர வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

ஆனால் இறுதிச்சடங்குகளைச் செய்ய தங்கள் பாட்டி மற்றும் தாய் ஆகிய இருவரின் அனுமதியைப் பெற்ற சகோதரிகள் சரயு நதிக்கரையில் உள்ள காளிச்சரண் சுடுகாட்டில் தாத்தாவின் உடலுக்கு நெருப்பு வைத்தனர். கிராமத்தினர் மத்தியில் சகோதரிகளின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களில் சிலர் ஆதரவாகவும் பேசியது சிறிய மாற்றம் ஏற்பட்டதை உணர்த்தியது.

1 comment:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    ReplyDelete