Monday, June 29, 2009

எருமை ஓட்டிய ஏரோப்ளேன்...




மார்ச் 2009 கணக்குப்படி ஜெர்மனியில் வங்கிப்பணிகளை மேற்கொள்வதற்கு 441 வங்கிகள் அனுமதி பெற்றுள்ளன. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியில் இந்த வங்கிகளுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. மோசமான முதலீடுகள் என்று ஒரு பட்டியலை இந்த வங்கிகள் தயாரித்து யார் தோள்களில் ஏறிக்கொள்ளலாம் என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மொத்த மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

காந்தி கணக்கு என்று நம் ஊரில் சொல்வார்களே... அதுபோல ஒரு கணக்கைத் துவங்கினால் என்ன என்று அந்த ஊர் சீர்திருத்தவாதிகள் அந்நாட்டு அரசை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த மோசமான முதலீடுகளை தள்ளுபடி செய்து விடுவார்கள். என்ன, பணத்திற்கு எங்கே போவார்களா... இருக்கவே இருக்கிறார்கள் மக்கள். அவர்கள் தலை இப்போது பயன்படாவிட்டால் பிறகு எப்போது பயன்படப்போகிறது...?

இந்த மோசமான முதலீடுகளை அரசுப்பத்திரங்களாக மாற்றி விடுவார்களாம். அதை அந்த வங்கிகள் இருபது ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்த வேண்டுமாம். எருமை ஏரோப்ளேன் ஓட்டிய கதைதான் போங்கள். இப்போதெல்லாம் அடிக்கடி இக்கதையை சொல்கிறார்கள்.

மக்கள் ஆதரவு மார்க்சிஸ்டுகளுக்கா... கொள்ளையர்களுக்கா..?

பிரவீண் சுவாமியின் நேரடி ரிப்போர்ட்

லால்கார் பகுதியைச் சுற்றியுள்ள காடுக ளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள துவங்கியபோது, சல்போனி யில் இருக்கும் பழங்குடி மக்களிடம் சென்ற மாவோயிஸ்ட்டுகள், தடுப்பு அரண்களை கட்டுமாறு நிர்ப்பந்தித்தனர்.

துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு கூடிய அந்த பயங்கரவாதிகளின் உத்தரவுக்கு கீழ் படிந்து கிராம மக்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர்; சாலைகளில் பெரும் பள்ளங் களை வெட்டி துண்டித்தனர். எவரும், அவர்களது உத்தரவுகளை எதிர்த்துக் கேட்கவில்லை என்பது ஆச்சரியமானது அல்ல.

ஆனாலும், கடந்த திங்களன்று, இப்படி கடும் நிர்ப்பந்தத்தின் பேரில் தடுப்பு அரண்களை அமைக்க கட்டாயப்படு த்தப்பட்ட ஏராளமான உள்ளூர் மக்களின் சார்பாக துணிச்சலுடன் போங்காராம் லோகர் என்ற கிராமவாசி பேசினார். இந்த “ஒழுங்கீனத்திற்காக” போங்காராம் லோகர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார்; அந்த கிராமத்தை விட்டே வெளியேற்றப்பட்டார்.

லால்கார் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை, பழங்குடி மக்களின் கோப உணர்வின் வெளிப்பாடு என்று பெரும்பாலான மீடியாக்கள் எழுதுகின்றன. தங்கள் பகுதிக்கு வளர்ச்சியும், நீதியும் மறுக் கப்பட்டதை எதிர்த்தே அவர்கள் இவ் வளவு கோபத்துடன் திருப்பி அடிக்கி றார்கள் என்று எழுதுகிறார்கள். இன்னும் ஒருவர் ஒருபடி மேலேயே சென்று, கடந்த 30 ஆண்டுகளாகவே லால்கார் பகுதியில் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், போங்காராம் லோகரின் கதை - இந்தப் பகுதியில் இருக்கும் வெகு மக்களின் வாழ்க்கை - மேற்கண்ட கருத் துக்கள் வெறும் கதைகளே என்பதை உணர்த்துகின்றன.

வளர்ச்சி இல்லையா?

1977-ம் ஆண்டுக்கு செல்வோம்.
மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத் தின் லால்கார் பகுதியில் நிலப்பிரபுக் களின் பிடியில் சிக்கியிருந்த ஒட்டு மொத்த கிராமங்களையும் அவர்களிட மிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் விடுவித்தனர்.
இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைக்கு இலக்காகியுள்ள ஜார்க்ரம், பின்பூர் மற்றும் சல்போனி ஆகிய ஒன்றி யங்களில் உள்ள விவசாயிகளுக்கு 2002-03-ம் ஆண்டு வரை 16 ஆயிரத்து 280 ஹெக்டேர் நிலம் விநியோகம் செய்யப்பட் டுள்ளது. இதை மேற்கு வங்க அரசின் நிலம் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


இப்பகுதியில் நிலச்சீர்திருத்தம் தொடர்பாக கொல்கத்தாவில் இருக்கும் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத் தின் மூத்த ஆராய்ச்சியாளர் அபராஜிதா பக்ஷி, ஆய்வு செய்துள்ளார். ஜார்க்ரம் ஒன்றியப் பகுதியில் நடத்திய ஆய்வில், “மொத்தமுள்ள குடும்பங்களில் 75 சதவீத குடும்பங்கள் நிலச்சீர்திருத்தத்தால் பயன டைந்தவர்கள். குறிப்பாக, பழங்குடி மக்க ளின் குடும்பங்களில், சுமார் 70 சதவீதம் குடும்பங்கள் விவசாய நிலத்தை பெற்றி ருக்கிறார்கள்; 90 சதவீதத்திற்கும் அதிக மானோர் வீட்டுமனை நிலங்களை பெற் றுள்ளனர். இது முற்றிலும் நிலச்சீர் திருத்தத்தின் விளைவாக கிடைத்த பலனே” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச்சீர்திருத்தம், நாட்டின் இதர பகு திகளில் வாழும் பழங்குடி மக்களை விட இப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் சுதந்திரத்தையும், வாழ்வுரிமையையும், சுய பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது என் பதே உண்மை.


லால்கார் பகுதி, மாவோயிஸ்ட்டுகளால் “விடுதலை” செய்யப்பட் டிருப்ப தாக, நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் எழுதி வியாபாரம் செய்து கொண்டிருக் கின்றன. ஆனால் அங்கு, பழங்குடி மக்களின் வாழ்நிலை தற்போது கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. அன்றாடம் வனப் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மூலம் இப்பகுதி முழுவதும் இருக்கும் பழங்குடி மக்களுக்கு வருமா னம் கிடைத்து வந்தது. அந்த வருமானம் தற்போது முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த மக்களின் வாழ்க்கையை சீராக வைத்திருந்த அரசின் திட்டங்கள், தற்போது செயல்படுத்த முடியாததால், அவர் களின் வாழ்நிலை மோசமான முறையில் சீர்குலைந்துள்ளது.


பூமிதன்சோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த மானேக் சிங், “கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, காட்டுப் பகுதிக்குள் நுழைந்து நாங்கள் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்யவிடாமல், மாவோயிஸ்ட்டுகள் தடுத்து விட்டார்கள். தினந்தோறும் காடுகளில் இலைகளை சேகரித்து சிறிய சிறிய இலை தட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நாங்கள் உற்பத்தி செய்வது வழக்கம். ஒவ் வொரு நாளும் இதற்காக வனத்துறை ஒரு தொழிலாளிக்கு ரூ.70 கூலியாக கொடுத்து வந்தது. தற்போது இது அனைத்தும் கெட்டுப் போய்விட்டது” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.

கொள்ளையும் தாக்குதலும்

மாவோயிஸ்ட்டுகள் வழிப்பறியிலும், கொள்ளையிலும் ஈடுபட்டதால் அதை தாங்க முடியாமல் லால்கார் பகுதியிலிருந்து அரசு ஊழியர்களும் வெளியேறியுள் ளனர். இப்பகுதியில் உள்ள கிராமப்புற சத்துணவு மையங்களில் வேலை செய்யும் அப்பாவி அங்கன்வாடி ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கொடுக்க வேண்டு மென்று மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள்ளனர்; பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் இதே போல இரண்டு மடங்கு பணம் கொடுக்க வேண்டுமென்று உள்ளூர் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத் துவர் ஹோனிரன் முர்மு மற்றும் அவரது மருத்துவமனையில் பணியாற்றும் செவி லிப் பெண் பாரதி மஜ்கி ஆகியோர் மிகக் கொடூரமான முறையில் காரில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னர், இப்பகுதியில் சுகாதாரப் பணி களும் முற்றிலும் சீர்குலைந்துள்ளன.

மக்கள் ஆதரவு யாருக்கு?

இது மட்டுமின்றி, லால்கார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக மக்கள் பெருமளவில் திரண்டு மாபெ ரும் கிளர்ச்சியில் ஈடுபடுவதாக ஊதப் படும் செய்திகளை, அப்பகுதியின் தேர்தல் புள்ளி விபரங்கள் முற்றிலும் நிராகரிக் கின்றன.


கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், லால்கார் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஜார்க்ரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்ரம் மக்கள வைத் தொகுதியில் கிழக்கு கார்பேடா, மேற்கு கார்பேடா (எஸ்.சி.), சல்போனி, நயாக்ரம் (எஸ்.டி.), கோபிபல்லவபூர் மற்றும் ஜார்க்ரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது மட்டுமின்றி ஜார்க்ரம் மக்களவைத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றுள் ளது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் 1977-ம் ஆண்டு முதல் ஜார்க்ரம் மக்களவைத் தொகுதி இன்றைக்கு வரைக் கும் 32 ஆண்டுகளாக தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசமே உள்ளது.

காவல்துறை சோதனைகள்

கடந்த ஆண்டு நவம்பர் 2-ம்தேதி சல்போனியில் நடைபெற்ற இரும்பு எஃகு தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார் யாவை படுகொலை செய்ய குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, லால்கார் பகுதி முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனைகளின் போது, காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது; இதில் பலர் காயமடைந்தனர்.


இதைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம்தேதி நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் முதன்மை குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்டவரின் உடன் பிறந்த சகோதரரும், மாவோயிஸ்ட்டுகளின் தீவிர ஆதரவாளருமான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாத்ரதார் மகதோ, “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி முழுவதும் சாலைகளை மறித்தனர். காவல்துறையினரை தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை குறிவைத்து தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர்.


கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் பணிகளுக்கு கூட காவல்துறையை நுழையவிடக்கூடாது என்று போரோ பெலியா, சோட்டோபெலியா, தலீல்பூர் சவுக் மற்றும் காஸ் ஜங்கிள் ஆகிய கிரா மங்களில் மாவோயி°ட்டுகள் துப்பாக்கி முனையில் “போராட்டம்” நடத்தினர்.


மாவோயிஸ்ட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” ஆகியவற்றுக்கு ஆதரவாக அப்பகுதி பழங்குடி மக்கள் அனைவரும் அணி திரண்டு விட்டார்கள் என்று கூறப்படுவது உண்மையானால், அதற்கு அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மாநிலத் திலேயே பெரும் வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றிருக்க முடியாது.


(பழங்குடி மக்கள் தொகுதியான) ஜார்க்ரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான அலை ஏதும் இல்லை. தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட புலின் பிகாரி பாஸ்கி, 5 லட்சத்து 45 ஆயிரத்து 231 வாக்குகள் பெற்றார். இது, அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்ரித் ஹன்ஸ்தா பெற்ற 2 லட்சத்து 52 ஆயிரத்து 886 வாக்குகளை விட மிகப்பெரும் வித்தியாசம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வெற்றியின் போது, சிபிஎம் வேட்பாளர் பாஸ்கி, லால்கார் கிராமம் உள்ளடங்கிய பின்பூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

அச்சத்தின் பிடியில்...

அப்படியானால், மாவோயிஸ்ட்டுகள் எப்படி இவ்வளவு “செல்வாக்கை” பெற் றார்கள்?
இந்த கேள்விக்கு மக்களவைத் தேர்த லின் போதே இத்தொகுதியில் போட்டி யிட்ட ஜார்க்கண்ட் கட்சி வேட்பாளர் சுனிபால ஹன்ஸ்தா ஒரு பேட்டியில் எளிமையான பதில் ஒன்றை அளித்தார். அது: “மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.”

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.


கடந்த ஆண்டு மேற்கு வங்க அரசுக்கு எதிராக மேற்படி “காவல்துறை அராஜகங் களுக்கு எதிரான மக்கள் குழு” மக்களை திரட்ட முயன்றபோது, மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவோடு இவ்வமைப்பினர் மேற்கொண்டு வரும் வன்முறையை எதிர்த்து பாரத் ஜகத் மஜ்ஹி மார்வா என்ற பாரம்பரிய பழங்குடி அமைப்பு கடந்த டிசம்பர் 9-ம்தேதி பேல்பகாரியில் ஒரு பேரணி நடத்தியது. இந்தப் பேரணியை நடத்திய அமைப்பின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானவர்கள்தான்.

எனினும், தங்களை எதிர்த்து பேரணி நடத்தினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அதற்கு தலைமை தாங்கிய பழங்குடி தலைவர் சுதிர் மந்தல், அடுத்த 48 மணி நேரத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மிகக் கொடூரமாக துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்.

(ஜூன் 26, இந்து நாளேட்டிலிருந்து)
தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Sunday, June 28, 2009

ம்... கிளம்புங்கள்...


பிரிக்(BRIC) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைக் கொண்டதொரு அமைப்பாகும். உலகின் பெரிய பணக்கார நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் ஏழு நாடுகள் சேர்ந்து அமைத்த ஜி-7 என்ற அமைப்பை விட இது பொருளாதார ரீதியில் வலுவானது என்று தகவல்கள் வெளியாகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை நம்பியிருக்கும் பொருளாதாரங்களே வளரும் என்ற மூட நம்பிக்கையைத் தகர்க்க இத்தகைய மாற்று அணிகள் உருவாகின. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் உருவானவையும் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டதேயாகும்.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலர்தான் நாணயமாகப் பயன்படுகிறது. இவ்வாறு டாலரை நம்பியிருக்கும் நிலையை மாற்றுவது எப்படி என்பது பற்றி பிரிக் மாநாட்டில் தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். இதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குதான் கூடுதல் பிரச்சனை. இந்த இரு நாடுகளும் ஏராளமான பணத்தை அமெரிக்க அரசுப் பத்திரங்களில் கொண்டுபோய் முதலீடு செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் அமெரிக்கா கடனாகத்தான் வாங்கியுள்ளது.

வங்கியில் ஒரு நபர் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி அதைச் செலுத்தாவிட்டால் அவருக்கு நெருக்கடி ஏற்படும். அதே நபர் பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதைச் செலுத்தாவிட்டால் வங்கிக்கு நெருக்கடி ஏற்படும் என்று சொல்வார்கள். வங்கியின் நிலையில் இந்தியாவும், சீனாவும் உள்ளன. சீனா விழித்துக் கொண்டதுபோல் தெரிகிறது. அண்மையில் பல நாடுகளுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. தனது நாணயமான யுவானை வைத்தே பண்ட மாற்றம் செய்து கொள்வது என்பதுதான் அது.

வடிவேலு பாணியில் "ம்... கிளம்புங்கள்..." என்று சொன்னால்தான் நமது ஆட்சியாளர்கள் கிளம்புவார்களா...??

வளரும் பொதுத்துறை; சரியும் தனியார்

இந்தியாவின் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டுத்துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் மீதுதான் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மே மாதத்திற்கான புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வரைமுறையே இல்லாமல் கடன்களைக் கொடுத்ததால் உருவாக சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நெருக்கடியால் காப்பீட்டுத்துறையின் வருமானமும் சரிந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுத்துறையின் வருமானம் ஐந்து சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. புதிய வர்த்தகம் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் திண்டாடியதைத்தான் இந்தப் புள்ளிவிபரம் காட்டுகிறது. இத்தகைய சரிவிலும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறை எல்.ஐ.சி. மட்டுமே சரியாமல் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது புதிய பாலிசிக்காக மே மாதத்தில் பெற்ற பிரிமிய வருமானத்தின் அடிப்படையிலானதாகும்.


காப்பீட்டுத்துறையின் ஒழுங்குமுறை அமைப்பு சேகரித்துள்ள விபரங்களின்படி இந்தப் புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் மே மாதத்தில் புதிய பிரிமிய வருமானமாக 2 ஆயிரத்து 923 கோடி ரூபாயை எல்.ஐ.சி. வசூல் செய்திருந்தது. நடப்பு நிதியாண்டில் நெருக்கடியையும் மீறி 3 ஆயிரத்து 242 கோடி ரூபாய் எல்.ஐ.சி. நிறுவனத்தால் வசூல் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அனைத்துமே சரிவைத்தான் சந்தித்துள்ளன. குறிப்பாக ஐசிஐசிஐ புருடென்சியல் நிறுவனத்தின் சரிவு 43 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 697 கோடி ரூபாயை புதிய பிரிமிய வருமானமாகப் பெற்ற ஐசிஐசிஐ, நடப்பாண்டில் வெறும் 348 கோடி ரூபாயை மட்டுமே பெற்றுள்ளது.


தங்கள் வளர்ச்சி பற்றி செய்தியாளர்கள் மத்தியில் பேசும் எல்.ஐ.சியின் செயல் இயக்குநர் தாமஸ் மாத்யூ, நடப்பாண்டை நல்ல முறையில் துவக்கியுள்ளோம். ஆனால், இதோடு சந்தோஷப்பட்டு நின்றுவிடக்கூடாது. உண்மையான வர்த்தகம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்தான் துவங்கும். நடப்பாண்டில் புதிய பிரிமிய வருமானத்தைப் பெறுவதில் 30 முதல் 40 சதவீதம் வரை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். எல்.ஐ.சி. வழங்கியுள்ள பங்குச்சந்தையோடு இணைக்கப்பட்ட பாலிசிகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது என்பதையும் தாமஸ் மாத்யூ சுட்டிக்காட்டுகிறார்.


பொதுக்காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை, பொதுத்துறை நிறுவனங்கள் சந்தையில் தங்கள் பங்கை அதிகரித்துள்ளன. நேஷனல் நிறுவனத்தைத் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களான நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் ஆகிய அனைத்துமே நெருக்கடியின் தாக்கத்தை மீறி வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஐசிஐசிஐ லோம்பார்டு(-19.7), பஜாஜ் அல்லையன்ஸ்(-17.4), இஃப்கோ டோக்யோ(-13.26) மற்றும் டாடா ஏஐஜி(-19.6) ஆகிய தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்மறை வளர்ச்சியையே கண்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் ரிலையன்ஸ் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.


பொதுக்காப்பீட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் கண்டுள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓரியண்டல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாலிசிகளைப் புதுப்பித்துள்ள நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தனியார் நிறுவனங்களிடமிருந்த வர்த்தகம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாறியுள்ளதைப் பார்க்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு சளைக்காத பிரிமியத்தொகை மற்றும் பொதுத்துறை மீது மக்களுக்குள்ள நம்பிக்கை ஆகியவையே இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்கிறார். ஆயுள் காப்பீட்டுத்துறை சரிவை சந்தித்தள்ள நிலையில், அந்த அளவிற்கு பொதுக்காப்பீட்டுத்துறை செல்லவில்லை என்பதே இரு துறைகளுக்குமுள்ள வேறுபாடாகும்.


பொதுத்துறை மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகி வருகிறது. இதையெல்லாம் மீறித்தான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து காப்பீட்டுத்துறையை அன்னிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி நடந்து வருகிறது. உலக அளவில் 85 சதவீத வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பொதுத்துறையில் உள்ள இந்திய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 24, 2009

வற்றி வரும் கச்சா எண்ணெய்...!


இராக்கின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி ஆக்கிரமிப்பு செய்தபோது அது பெட்ரோல் வளத்தைக் கைப்பற்றவே என்பது அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்தது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராக்கில் உள்ள பொம்மை அரசு பெட்ரோல் கிணறுகளில் அமெரிக்க வாளிகளை இறக்கும் வேலையில் இறங்கியுள்ளது. தென் அமெரிக்க மக்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு மேற்கு ஆசியாவைவிட்டு நகர்வதில்லை என்று அமெரிக்கப்படைகள் உட்கார்ந்து கொண்டுவிட்டன. தான் ஆட்சிக்கு வந்தால் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று உறுதிமொழி அளித்த ஒபாமா, பொருளாதார நெருக்கடிச் சுழலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிற பெட்ரோல் வளம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் தேவை கையைக் கடிக்கும் காலம் வருவதற்கு இன்னும் ஒரு தலைமுறை ஆகிவிடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் அச்சத்தின் நிழல் மனிதகுலத்தைப்பின்தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. மேற்கு ஆசியாவின் அமைதியைக் குலைத்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு இயற்கை வளம் சூறையாடப்படும் வரையிலும் தொடரும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்து. 70க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவம் வெளியேறாமல் நிரந்தரக் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டது வரலாறு.


தற்போது சவூதி அரேபியாதான் அதிகமான அளவில் எண்ணெய் எடுத்துக் கொண்டிருக்கிறது. பீப்பாய்க்(பேரல்) கணக்கில் கச்சா எண்ணெயை அளவிடுகிறார்கள். ஒரு பீப்பாய் என்பது 159 லிட்டராகும். பெட்ரோலியத்துறையில் பகாசுர நிறுவனம் என்று கருதப்படும் பிபி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கின்படி சவூதி அரேபியாவிற்கு அடுத்து, ஈரான், இராக், குவைத், வெனிசுலா, யுஏஇ, ரஷ்யா என்று பட்டியல் நீளுகிறது. சுமார் 27000 கோடி பேரல் எண்ணெய் இருப்பு சவூதி அரேபியாவிடம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் சவூதி அரேபியாவைவிட ஈரான், இராக் ஆகிய நாடுகளில் அதிக ஆண்டுகள் எண்ணெய் இருப்பு நீடிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் எண்ணெயின் அளவைப் பொறுத்தே இது கணக்கிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அளவு, ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டால் சவூதி அரேபியாவிடம் உள்ள எண்ணெய் வளம் இன்னும் 66 ஆண்டுகளுக்கு தாங்கும். ஈரானின் வளம் 87 ஆண்டுகளும், இராக் மற்றும் வெனிசுலாவில் நூறு ஆண்டுகளுக்கு மேலும், குவைத்தில் 99 ஆண்டுகளும் எண்ணெய் இருப்பு தாக்குப்பிடிக்கும். எண்ணெய் வெறி பிடித்து அலையும் அமெரிக்காவின் கையில் உள்ள இருப்பு இன்னும் 12 ஆண்டுகள் நான்கு மாதங்களுக்குத்தான் தாங்கும். இதுதான் ஈரான், வெனிசுலா என்று தனது கழுகுக்கண்களை படரவிடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.


இந்த எண்ணெய் வள இருப்புகளைக் கணக்கிடுவதிலும் சிக்கல் உள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வளம் பலரும் கணக்கிட்டுக் கொண்டுள்ள அளவிற்கெல்லாம் இல்லை. அதேபோல் கனடாவில் எக்கச்சக்கமான அளவு கச்சா எண்ணெய் புதையுண்டு கிடக்கிறது. சொல்லப்போனால் சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக அந்த நாட்டில்தான் எண்ணெய் வளம் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்பவர்களும் உண்டு. தகவல் களஞ்சியம் என்று கருதப்படும் விக்கிபீடியாவில் சுமார் 17 ஆயிரத்து 900 கோடி பீப்பாய்கள் இருப்பு கனடாவில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பிபி நிறுவனம் வெளியிட்டுள்ள விபரத்தில் வெறும் 2500 கோடி பீப்பாய் எண்ணெய்தான் கனடாவில் உள்ளது என்று கூறப்படுகிறது.


கண்டறிந்ததைவிட இன்னும் ஏராளமான எண்ணெய் வளம் புதையுண்டு கிடப்பதாக கருதப்படும் நாடுகளில் ரஷ்யா மற்றும் சில தென் அமெரிக்க நாடுகள் அடங்கும். அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடுகளில் வெனிசுலா போன்ற ஒரு சில நாடுகள்தான் அந்த வளத்தில் கிடைக்கும் வருமானம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்று செயல்படுகின்றன. சாவேஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த எண்ணெய் வளத்திற்கும் வெனிசுலாவில் உள்ள சுமார் 90 சதவீத மக்களுக்கு தொடர்பே இல்லாமல் இருந்தது. அந்த நிலைமை அங்கு மாறிவிட்டது. மற்ற நாடுகளிலும் மாற வேண்டியுள்ளது.

Monday, June 22, 2009

கோடிகளில் புரளும் மாவோயிஸ்டுகள்...



மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மாவோயிஸ்டுகள் தங்கள் இயக்கத்தை வர்த்தக நிறுவனம் போன்றே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பல பகுதிகளில் இவர்கள் அடிக்கும் கொள்ளையால் சராசரியாக ஆண்டுதோறும் ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்று கடந்த ஆண்டே பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதோடு, 2007 ஆம் ஆண்டில் மட்டும் அவர்கள் பறித்த பணத்தின் அளவு 1,500 கோடி ரூபாயையும் தாண்டிவிட்டது என்று சத்தீ°கரைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.


மக்கள் யுத்தத்தை நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளை விடுதலை மண்டலங்களாக அறிவித்துக் கொள்கின்றனர். சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்டு, ஆந்திரா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இத்தகைய விடுதலை மண்டலங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தில் அவர்களின் இத்தகைய முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்ததே விடுதலை மண்டலம் உருவாகாததற்குக் காரணமாகும். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருந்த பகுதிகளில் மார்க்சி°ட் கட்சியின் வெற்றியும் அவர்களுக்கு அரசியல் ரீதியாகப் பலத்த அடியைத் தந்தது.


மேற்கு வங்கத்தில் தாக்குதல் நடத்திவிட்டு அருகாமையில் உள்ள ஜார்க்கண்டு மாநிலத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் மாவோயிஸ்டுகளுக்கு வருமானத்திற்கு மட்டும் பஞ்சமே ஏற்படவில்லை. பணம் கிடைக்கிறது என்றால் யாரையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. யாருக்காகப் போராடுகிறோம் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்களோ அத்தகைய ஏழை, எளிய உழைப்பாளிகளின் பாக்கெட்டுகளில் கையை நுழைக்கவும் மாவோயிஸ்டுகள் தயங்குவதில்லை. இரு பெரிய நக்சலைட் அமைப்புகள் இணைந்து செப்டம்பர் 2004ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு) என்ற அமைப்பை உருவாக்கின. கட்சியின் ஒவ்வொரு ஊழியரும் ஆண்டு சந்தாவாக ரூ.10 தரவேண்டுமென்று அப்போது முடிவெடுத்தனர்.
ஆனால் தங்களுக்கு இந்த வருமானம் போதாது என்பதால் அனுதாபிகளிடமிருந்து வசூல் செய்வதோடு, பலவந்தமாகவும் மக்களிடமிருந்து பணம் பறிப்பது என்றும் மாவோயிஸ்டுகள் முடிவு செய்தார்கள். சுற்றுச்சூழல் குறித்து எழுதி வரும் ரிச்சர்டு மஹாபத்ரா என்ற எழுத்தாளர் இதை அம்பலப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், மூங்கில் மரங்களை வெட்டும் ஏழைத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கூலியிலிருந்து ஐந்து ரூபாயை நாள்தோறும் தர வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிர்ப்பந்தப்படுத்தியிருந்தார்கள் என்று குறிப்பிட்டார். புகையிலை பறிக்கும் ஏழைப் பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகள் விட்டுவைக்கவில்லை.


ஆந்திராவில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை நான்கு பிரிவுகளாக மாவோயிஸ்டுகள் பிரித்தனர். பணிகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மொத்த செலவில் பிரிவுவாரியாக எட்டு, ஆறு, நான்கு மற்றும் இரண்டு சதவீத நிதியை மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் தந்துவிட வேண்டும் என்று மிரட்டினார்கள். அதோடு, 2001 ஆம் ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த காகித ஆலையிடமிருந்து மாதாமாதம் 50 லட்சம் ரூபாயை மாவோயிஸ்டுகள் வாங்கியுள்ளனர். மற்றொரு துணி ஆலையிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாயை மாவோயிஸ்டுகள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் என்று ஆந்திரக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.


நாகாலாந்து மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உள்ளிட்டு அனைவரின் ஊதியத்திலிருந்து தீவிரவாதிகளுக்கு பணம் தரப்படுவது போன்றே பீகார் மற்றும் ஜார்க்கண்டு மாநிலங்களில் லெவி வசூலிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் மிரட்டல்களுக்குப் பயந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணம் தந்துள்ளனர். இது போன்ற நிலையை மேற்கு வங்கத்தில் உருவாக்குவதற்கு நடந்த முயற்சிக்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு இருந்ததால்தான் பெரும் வன்முறையை மாவோயிஸ்டுகள் கட்டவிழ்த்து விட்டனர். அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன.

ராகுல் சாமி வந்துருக்காக...



தலித்துகளின் பகுதிகளுக்கு செல்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அவருடன் தங்கபாலு, ஞானதேசிகன் மற்றும் பலர்.
(திடீரென்று தலித் ஒருவரின் குடிசைக்குள் நுழைகிறார்)

தலித் குடும்பத்தலைவர்(மனைவியிடம்) : ஏய்... யார் வந்துருக்கா பாரு... ராகுல் சாமி வந்துருக்காக...


மனைவி : வாங்க சாமி... வாங்க...


ராகுல் (தலித்துகளிடம்) : நோ...நோ... ராகுல் காந்தி... நாட் ராகுல்சாமி...


ஞானதேசிகன் (தலித்துகளிடம்) : அவர் பேரு ராகுல் சாமி இல்ல... ராகுல் காந்தி...

கு.தலைவர் : தெரியும் சாமி....

ஞானதேசிகனைப் பார்த்து ராகுல்(ஆங்கிலத்தில்) : ஹா.. ஹா... நீங்களும் சாமியா...

ராகுலின் மகிழ்ச்சியைக் கண்டு குடும்பத்தலைவரும், அவர் மனைவியும் பூரித்துப் போகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது மொழிபெயர்ப்பால் சிக்கிக் கொண்ட ஞானதேசிகன் முழிக்கிறார். ராகுல் சொல்வதைத்தவிர வேறு எதையும் அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லக்கூடாது என்ற உறுதிமொழியை மீண்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களின் உரையாடலை மொழி பெயர்க்கத் துவங்குகிறார்.

ராகுல் : எப்படி இருக்கீங்க...

கு.தலைவர் : நல்லா இருக்கோம் சாமி...

ராகுல்(சாமி என்று சொல்வதைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல்) : பணவீக்கம் குறைஞ்சுருச்சு...

கு.தலைவர் : அய்யோ... பாவம்...

கு.தலைவர்முகம் கோணலாகிப் போனதால் பதற்றமடைந்த ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : நீங்க ஒழுங்கா சொல்லலை போலருக்கு...

ஞானதேசிகன் : அய்யய்யோ.. வீக்கம்னு நீங்க சொன்னத அப்படியேதான் சொன்னேன்.. ஏதோ அடிபட்டு இப்ப வீக்கம் குறைஞ்சுட்டதா அவங்க நெனச்சுட்டாங்க... நீங்க சொல்றத அப்புடியே தமிழ்ல சொல்றதத்தவிர வேற வழி எனக்கு இல்லை..

கு.தலைவர் : என்னங்க நாங்க எதுவும் தப்பா சொல்லிட்டோமா...??

ஞானதேசிகன்(மனசுக்குள்) : ஆஹா... என்னை சிக்க வெக்காம விடமாட்டாங்க போலருக்கே..
ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : பணவீக்கம் எதிர்மறையாப் போயிருச்சுன்னு அவங்களுக்கு விளக்கமாச் சொல்லுங்க...

ஞானதேசிகன் : அதாவது, இப்ப நீங்க ஒரு கார் வாங்குறீங்கன்னு வெச்சுக்கோங்க...

மகன் : அய்... காரு(என்று கூறிவிட்டு கிழிஞ்ச டயரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்)

கு.தலைவர் : காரா... எதுக்கு...

ஞானதேசிகன் : அத விடுங்க... போன வருஷம் தக்காளி கிலோ அஞ்சு ரூபாயா இருந்துச்சு... இப்ப ஒரு கிலோ கேட்டீங்கன்னா தக்காளியும் குடுத்து அஞ்சு ரூபாயும் கைல கொடுத்து அனுப்புவாங்க...

அதிர்ந்து போன தங்கபாலு, "அப்படிலாம் இல்ல..." என்றார் அவசர, அவசரமாக.

கு.தலைவர் : அதான் எனக்குத் தெரியுமே... உங்க தலைவர் என்ன சொல்றார்னு சொல்லுங்க சாமி....

தங்கபாலுவையும் சாமின்னு சொன்னதும் ராகுல் உற்சாகமடைகிறார்.

தங்கபாலு : விலையெல்லாம் குறைஞ்சுருச்சுன்னு சொல்றாரு...

மனைவி : அப்படின்னா சாமி சொன்னது உங்களுக்கும் புரியலையா...

ராகுல் : என்ன சொல்றாங்க...

தங்கபாலு : ஒண்ணுமில்ல சாமி...(அய்யய்யோ... இந்த சாமி விவகாரம் நமக்கு தொத்திக்கிச்சே என்று நாக்கைக் கடித்துக் கொள்கிறார்) நாம சொல்றது அவங்களுக்குப் புரியல...

ராகுல் : அமெரிக்கா உடன்பாட்டால மின்சாரம் வரும்குறத சொன்னா நம்புவாங்களா...

தங்கபாலு : இந்த வீட்டுக்கு இன்னும் மின் இணைப்பே குடுக்கலை...

ஞானதேசிகன் : நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா...

ராகுல் : சொல்லுங்க...

ஞானசேகரன் : அடுத்த வீட்டுக்கு போலாமே...

ராகுல் : சாப்பாடும் இங்கதாங்குறதுதான நம்ம திட்டம்...

தங்கபாலு : (மனசுக்குள்) இவர் போற வீட்டுல சமைச்சததான் இவ்வளவு நாளா சாப்புட்டோம்னு நெனச்சுட்டாரு போலருக்கே...

செல்போன் அடிக்கிறது.
கையில் எடுத்த ராகுல் : ஹலோ... யெஸ் ராகுல் சாமி... ஸாரி... நோ... நோ... ராகுல் காந்தி..

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

Friday, June 12, 2009

பினராயி விஜயன் குற்றவாளியா??

கேரளாவில் உருவாகியுள்ள எ°.என்.சி-லாவாலின் சர்ச்சை கட்சிக்கு எதிராக உள்ள, அதிலும் குறிப்பாக ஊடகங்களில் பணியாற்றுகின்ற கட்சி எதிர்ப்பாளர்களால் ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களோடு இணைந்து உருவாக்கப்பட்டு, பரப்பப்படும் சர்ச்சைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். தணிக்கை அதிகாரியின் ரகசிய தணிக்கை அறிக்கையில் உள்ள பத்தியொன்றில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்ச்சையை எழுப்புகிறார்கள். குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு இந்த அறிக்கை கசிய விடப்படுகிறது. மார்க்சி°ட் கட்சித்தலைவர்கள், குறிப்பாக கட்சியின் மாநிலச் செயலாளரும், 1996-99ல் மின்துறை அமைச்சராகவும் பணியாற்றிய பினராயி விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவதே இதன் நோக்கமாகும். உண்மைகளை தீர ஆய்வு செய்தால் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் ஊடகங்களின் ஒரு பகுதியினர் ஆகியோரின் தீய நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மூல ஒப்பந்தம்

கேரளாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட நீர்மின் நிலையங்களில் பள்ளிவாசல்(1940-41), செங்குளம்(1954-55) மற்றும் பன்னியாறு(1963-64) ஆகியவையும் அடங்கும். தனது ஆயுட்காலத்தை கிட்டத்தட்ட இந்த நீர்மின் நிலையங்கள் கடந்து விட்ட நிலையிலும், பெரும் அளவில் பராமரிப்பு செய்ய வேண்டியிருப்பதால் இந்த நிலையங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. இந்த நிலையங்களில் உள்ள எந்திரங்களை மாற்றி விட்டு, மின்திட்டங்களை மேம்படுத்தி, நவீனமயப்படுத்த 1995 ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்தது. இந்தப் பணிகளைச் செய்ய சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோராமல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக செய்யும் வழியை அரசு தேர்ந்தெடுத்தது.


இதற்காக கனடாவைச் சேர்ந்த எ°.என்.சி-லாவாலின் என்ற பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனத்துடன் ஆக°ட் 10, 1995 அன்று அப்போதைய மின்துறை அமைச்சர் சி.வி.பத்மராஜன் கையெழுத்திட்டார். அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பள்ளிவாசல்-செங்குளம்-பன்னியாறு திட்டங்களை(இனி பிஎ°பி என்று இக்கட்டுரையில் குறிப்பிடுவோம்) மேம்படுத்தத் தேவையான கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுக்கு நிதி வழங்க கனடாவின் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் ஒப்புக்கொண்டிருந்தது.


இதற்குப்பிறகு பிப்ரவரி 24, 1996 அன்று கனடாவுக்கு பயணம் சென்ற புதிய மின்துறை அமைச்சர் ஜி.கார்த்திகேயன், நிர்வாகம், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான மேற்பார்வை ஆகியவற்றிற்குத் தேவையான சேவைகளை வழங்குவது குறித்த எ°.என்.சி-லாவாலின் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த ஒப்பந்தம் என்று அப்போது கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை ஆவணங்களும் ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிற்சேர்க்கை பியில் சேர்க்கப்பட்டிருந்த பட்டியலில் கனடாவின் நிதியால் பெறப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றின் விலைகள் மற்றும் கனடாவின் ஏற்றுமதிக் கடன் நிதி மூலம் கிடைக்கவிருக்கும் ஒட்டுமொத்த செலவு ஆகியவையும் அதில் இருந்தன.

இடது ஜனநாயக முன்னணி அரசின் முயற்சிகள்

மே 1996ல் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்குள், மாநிலத்தின் மின்சார இருப்பு பெரும் நெருக்கடியான நிலையில் இருந்தது. வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு மூன்று மணிநேர மின்வெட்டும், தொழில் நிறுவனங்களுக்கு 95 சதவீத மின்வெட்டும் அமலில் இருந்தது. கேரள மாநில மின்சார வாரியமும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது. இந்த நிலையில் ஏற்கெனவே துவங்கப்பட்ட மின்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற இடது ஜனநாயக முன்னணி முடிவு செய்தது. புதிய திட்டங்களையும் அது துவக்கியது. இதன் விளைவாக, மே 2001ல் இடது ஜனநாயக முன்னணி அரசின் பதவி நிறைவுபெறும் வேளையில் 1,083.6 மெகாவாட் மின்னுற்பத்தி அதிகரித்திருந்தது. அதற்கு முன்பிருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக்காலத்தில் வெறும் 14 மெகாவாட் மட்டுமே மின்னுற்பத்தி அதிகரித்தது. இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நிறைவு பெறும்போது மின்வெட்டு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது. தனது தேவையை சுயமாகவே பூர்த்தி செய்யும் மாநிலமாக கேரளா மாறியது.


கொள்முதலில் ஒரு வெளிப்படையான நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது இடது ஜனநாயக முன்னணியின் அணுகுமுறையில் முக்கிய அம்சமாகும். இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டதில் ஒரு திட்டம் கூட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது பன்னாட்டு நிறுவனத்திடம் கொடுத்தோ செய்யப்படவில்லை. இடது ஜனநாயக முன்னணி அரசால் துவங்கப்பட்ட அதிரபள்ளி நீர்மின்திட்டம்(163 மெகாவாட்) மற்றும் குட்டியாடி கூடுதல் விரிவாக்கத்திட்டம்(100 மெகாவாட்) ஆகியவற்றிற்கு வெளிப்படையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. கோழிக்கோடு அனல்மின் நிலையத்திட்டத்திற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, பி.எச்.இ.எல்(பாரத் ஹெவி எலக்டிரிகல் லிமிடெட்) நிறுவனத்தால் அது நிறைவேற்றப்பட்டது. இதற்கு மாறாக, தற்போது சர்ச்சைக்குள்ளாகும் பிஎ°பி திட்டம் உள்ளிட்டு ஐக்கிய ஜனநாயக முன்னணி காலத்தில் கொண்டு வரப்பட்ட எந்தத் திட்டமுமே வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாக வழங்கப்படவில்லை. மேலும், இத்திட்டங்களில் பெரும்பாலானவை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


மாற்றுக்கு குறைவான வாய்ப்பு


அரசு அமைக்கப்பட்டபிறகு இந்தக் கேள்வி இடது ஜனநாயக முன்னணி அரசின் முன்பாக எழுந்தது - புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசால் துவக்கப்பட்ட மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்களை என்ன செய்வது? ஐக்கிய ஜனநாயக முன்னணியால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை பலனளிக்கவில்லை. நெர்யாமங்கலம் மற்றும் சபரி நீர்மின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைவிட்டுவிட்டு, புதிதாக சர்வதேச அளவிலான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர இடது ஜனநாயக முன்னணி முடிவு செய்தது. ஏபிபி என்ற °வீடனைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்துடன் நெர்யாமங்கலம் நீர்மின்திட்டம்(25 மெகாவாட்) தொடர்பாக ஐக்கிய ஜனநாயக முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அரசின் முடிவை எதிர்த்து ஏபிபி நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றதால் அந்தத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு தடைபட்டது. இறுதியில், ஏபிபி நிறுவனத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


பிஎ°பி திட்டங்களைப் பொறுத்தவரை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமல்லாது எ°.என்.சி.-லாவாலின் நிறுவனத்துடன் ஒப்பந்தத்திலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, சச்சரவுகள் எழுந்தால் பாரிசில் உள்ள சர்வதேச வர்த்தக்குழுதான் நடுவராக இருக்க முடியும். பேச்சுவார்த்தைகளில் வெகுதூரம் தாண்டி விட்டநிலை மற்றும் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் விதிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்தத்திட்டங்களை ஐக்கிய ஜனநாயக முன்னணியின் திட்டத்தின்படியே மேற்கொள்வத என்று இடது ஜனநாயக முன்னணி முடிவு செய்தது.
இதன்படி, முதல்வர் ஈ.கே.நாயனார் மற்றும் மின்துறை அமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையிலான அமைச்சர்கள் குழு, கேரள மாநில மின்சார வாரிய அதிகாரிகளுடன் இணைந்து அக்டோபர் 1996ல் கனடா சென்று எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் மற்றும் அரசு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளிலிருந்து சில நல்ல அம்சங்களைப் பெறுவதில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.


1) வெளிநாட்டிலிருந்து பெற வேண்டிய பொருட்களின் மதிப்பு 188 கோடி ரூபாயிலிருந்து 149 கோடியாகக் குறைக்கப்பட்டது.

2) எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் நிர்ணயித்த ஆலோசனைக்கட்டணத்தை 24.4 கோடி ரூபாயிலிருந்து 17.88 கோடியாகக் குறைக்க முடிந்தது.

3) கடனுக்கான வட்டி விகிதம் 7.8 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

4) திட்டத்தின் ஒருபகுதியான உதவித்திட்டத்திற்கான மதிப்பு 43 கோடி ரூபாயிலிருந்து 98 கோடியாக அதிகரிக்கப்பட்டது.


இறுதியாகச் சொல்லப்பட்ட உதவித்திட்டத்திற்கான நிதி எ°.என்.சி-லாவாலின் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும். மலபாரில் ஒரு நவீன மருத்துவமனையை அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும். பிப்ரவரி 1996ல் கையெழுத்திடப்பட்ட மூல ஒப்பந்தத்தில் கனடாவிலிருந்து பெறும் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களை நிலையான விலையில் பெறுவதற்கான அம்சம் பிற்சேர்க்கையாக ஜூலை 6, 1998ல் இணைக்கப்பட்டது.


ஐக்கிய ஜனநாயக முன்னணியே உண்மையான வில்லன்


தணிக்கை அதிகாரியின் அறிக்கையின் பகுதிகள் என்று கூறப்படும் அம்சங்களின் அடிப்படையில் ஊடகங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் கூறப்படும் மையக்கருத்துகள் :
1) மத்திய மின்சார முகமை அளித்த அறிவுரைக்கு மாறாக இந்த மேம்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அதோடு, இந்தத்திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததுதானா என்பதை அறியவும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
2) மேற்கூறிய திட்டங்களை முழுமையாக மேம்படுத்துவதற்கு எதிராக இ.பாலானந்தன் குழு அளித்த பரிந்துரைகளை இடது ஜனநாயக முன்னணி அரசு புறக்கணித்து விட்டது.
3) நியூ இண்டியன் எக்°பிர° நாளிதழின்படி, குறைவான தொகைக்கு செய்யத் தயாராக இருந்த பொதுத்துறை பி.எச்.இ.எல்.லை கணக்கில் கொள்ளாமல் கனடாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு திட்டத்தை இடது ஜனநாயக முன்னணி அரசு வழங்கியுள்ளது.
4) வெறும் ஆலோசனை ஒப்பந்தமாகத்தான் ஐக்கிய ஜனநாயக முன்னணி இதை வைத்திருந்தது. பொருட்களை பெறக்கூடிய ஒப்பந்தமாக இடது ஜனநாயக முன்னணிதான் மாற்றியது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை.


இந்த விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஒரு அடிப்படையான உண்மையை புறக்கணித்து விடுகிறார்கள். மேம்படுத்த வேண்டும் என்ற முடிவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் வழியாக திட்டத்தை நிறைவேற்ற எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் தேர்வு மற்றும் அந்நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேம்படுத்த, பராமரிக்க அல்லது இன்னும் சில பணிகளுக்காக எத்தகைய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வழியைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கேரள மாநில மின்சார வாரியத்திற்குள் இருந்த பொதுக்கருத்து என்னவென்றால் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். யார் செய்வது என்பதை ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்வு செய்தது.


இ.பாலானந்தன் குழுவை இடது ஜனநாயக முன்னணி அரசு நியமித்தது. கேரள மாநில மின்சார வாரியத்தின் பணியை மேம்படுத்தவும், மின்சார நெருக்கடியை சமாளிக்கவும் மற்றும் மின்னுற்பத்தியை விரைவுபடுத்தத் தேவையான தொலை நோக்குத்திட்டம் ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை அளிக்க இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை பிப்ரவரி 2, 1997ல் அரசிடம் வழங்கப்பட்டது. அதற்குள் பிஎ°பி திட்டம் தொடர்பான கனடா நாட்டு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தை வெகுதூரம் சென்று விட்டிருந்தது. இக்குழு அளித்த மற்ற பரிந்துரைகளில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


குறைவான ஒப்பந்தப்புள்ளியை அளித்த பி.எச்.இ.எல்லை நிராகரித்துவிட்டனர் என்று சுயநல சக்திகளால் பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நியூ இண்டியன் எக்°பிர° நாளிதழ் தனது தலையங்கத்திலேயே இதைக் குறிப்பிட்டுள்ளது. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோலவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நிறைவேற்றுவது மற்றும் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனம் ஆகிய இரண்டையுமே ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுதான் முடிவு செய்தது. குறைவான ஒப்பந்தப்புள்ளிகளை பி.எச்.இ.எல். அளித்திருந்தது என்பது வெறும் கற்பனையே. இதை அக்டோபர் 16, 2001 அன்று சட்டசபையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மின்துறை அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளார்.
வெறும் ஆலோசனை தருவதற்கான ஒப்பந்தத்தை சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோராமல் பொருட்களை வழங்குவதற்குமான ஒப்பந்தமாக இடது ஜனநாயக முன்னணி மாற்றி விட்டது என்பதுதான் கடுமையான குற்றச்சாட்டாக வருகிறது. உண்மையில் சொல்லப்போனால், பிப்.24, 1996 அன்று கேரள மாநில மின்சார வாரியம் மற்றும் எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் ஆகியவற்றிற்கிடையிலான ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப சேவை உள்ளிட்டு கனடாவிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவது என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிற்சேர்க்கை பி இதற்கு சாட்சியாக உள்ளது. கீழ்க்கண்டவாறு அந்த பிற்சேர்க்கை கூறுகிறது.


கனடாவின் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்துடனான கூட்டம் மற்றும் விவாதங்கள், கனடாவிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிதியுதவியைப் பெற்றுக் கொள்வது பற்றிய பூர்வாங்க ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் செய்த மதிப்பீட்டின்படி நிதியுதவி இருக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.


இதனால் பிப்.24, 1996ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிலையான விலையுடனான ஒப்பந்தமாகும். தொடர்ந்து வந்த இடது ஜனநாயக முன்னணி அரசால் இதிலிருந்து பின்வாங்குவது என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விட்டது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையைக் குறைப்பது மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. அதைச் செய்வதில் இடது ஜனநாயக முன்னணி அரசு வெற்றி பெற்றிருந்தது.


விலைகள் பற்றி


59.95 மில்லியன் டாலர்(கனடா டாலர்) என்று நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகமானதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு நியமித்த ஆலோசனை நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட விலைகள்தான் நிர்ணயிக்கப்பட்டன. இந்த விலைகளை முடிவு செய்யும்முன்பாக பல தகுதிவாய்ந்த கனடா நிறுவனங்களிடமிருந்து விலைகளைக் கேட்டுதான் அந்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் நிர்ணயித்தது என்பதை கேரள மாநில மின்சார வாரியக்கூட்டத்தின் குறிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. பிப்ரவரி 1996ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் பகுதியாக இந்த விலைகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஏற்றுக்கொண்டது. இந்த அசல் ஒப்பந்தத்தின் பிற்சேர்க்கையில்தான் இடது ஜனநாயக முன்னணி அரசும் கையெழுத்திட்டது.


கடுமையான நிதிப்பற்றாக்குறை மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகளின் விளைவாக உள்நாட்டில் கடன் வாங்குவதற்கு ஏற்படும் அதிக செலவு போன்ற பிரச்சனைகளால் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான கட்டாயம் மின்வாரியத்திற்கு ஏற்பட்டது. மேலும், இந்த விலைகளை பரிசீலனை செய்ய தேசிய நீர்மின்சாரக்கழகத்தை ஆலோசகராக இடது ஜனநாயக முன்னணி அரசு நியமித்தது. இந்த விலை நிர்ணயம் நியாயமானதுதான் என்றும், சர்வதேச அளவிலும் இந்த விலைதான் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அக்கழகம் சான்றிதழ் அளித்தது.


ஆனால் நெர்யாமங்கலம் நீர்மின்நிலைய மேம்பாட்டுத்திட்டத்தில் கிடைக்கும் ஒரு யூனிட்டின் விலையுடன் ஒப்பிட்டு பல விமர்சகர்கள் பேசுகிறார்கள். இதில் ஒரு மெகாவாட்டின் விலை 1.07 ரூபாயாகவும், பிஎ°பி திட்டத்தில் எ°.என்.சி லாவாலின் ஒரு யூனிட்டுக்கு 2.24 என்று நிர்ணயித்துள்ளதாகவும் தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டுவதாகவும் கூறுகிறார்கள். இந்த விலைகளை ஒப்பிடும்போது, எ°.என்.சி லாவாலின் நிறுவனத்திற்கு 110 கோடி ரூபாய் அதிகமாக லாபம் கிடைத்துள்ளது என்றும், இது அரசு வருமானத்திற்கு ஏற்பட்ட இழப்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒப்பிட முடியாத அளவுகோல்களைக் கொண்ட இரு திட்டங்களை ஒப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்னுற்பத்தி எந்திரங்களை புதுப்பிப்பது மற்றும் சில சிறிய மாற்றங்களைச் செய்வதுமட்டும்தான் நெர்யாமங்கலத்திட்டத்தின் நோக்கமாகும். ஆனால் பிஎ°பி திட்டத்தில் ஒட்டுமொத்தமாக எந்திரங்களை மாற்றித்தருவதே அதன் நோக்கமாக இருந்தது. இதனால் ஒரு யூனிட் மெகாவாட்டின் விலை முந்தைய திட்டத்தைவிட அதிகமாக இருக்கும் என்பதே உண்மை.


ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒப்புதல்


பிஎ°பி திட்டங்களை நிறைவேற்றுவது வேறு சில நிதியுதவிகளை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். அதனால் சர்வதேச அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்று கேரள சட்டமன்றத்தில் முன்னாள் மின்துறை அமைச்சர் ஜி.கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார். இவர்தான் எ°.என்.சி லாவாலின் நிறுவனத்துடன் பிஎ°பி திட்டங்களை செயல்படுத்துவதற்கான அசல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர். சொல்லப்போனால், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக்காலத்தில் பாதி கழிந்திருந்த வேளையில்தான் இவர் மின்துறை அமைச்சராகிறார். குட்டியாடி திட்டத்தை செயல்படுத்துவதற்காக எ°.என்.சி லாவாலின் நிறுவனத்துடனான ஆலோசனை ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றை இவருக்கு முன்னதாக அமைச்சராக இருந்த சி.வி.பத்மராஜன் கையெழுத்திட்டு விட்டார். இந்த குட்டியாடி விரிவாக்கத்திட்டத்திற்கான பொருட்களை வழங்குவதற்கான பிற்சேர்க்கை ஒப்பந்தத்தில் பிப்ரவரி 24, 1996 அன்று ஜி.கார்த்திகேயன் கையெழுத்திட்டார். அதே நாளில்தான் பிஎ°பி திட்டங்களுக்கான ஆலோசனை ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. குட்டியாடி திட்டத்திற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான எந்த வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை என்று ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முன்னாள் அமைச்சர் சட்டமன்றத்திலேயே ஒப்புக்கொண்டார்.


குட்டியாடி விரிவாக்கத்திட்டத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு நடைமுறைப்படுத்தியது பற்றி 2004ஆம் ஆண்டுக்கான தலைமை தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கை கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தது. குட்டியாடி நீர்மின்திட்டத்தை விரிவுபடுத்தி 201 கோடி ரூபாய் செலவில் புதிய மின்னுற்பத்தி எந்திரங்களைப் பொருத்தியும் கூடுதலாக ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்க முடியாததால் விரிவாக்கத்திட்டம் முழுமையும் வீணாகிப்போனது. கூடுதல் மின்னுற்பத்தி எந்திரங்களைப் பொருத்துவதற்கு இருந்ததாகக் கூறப்பட்ட உபரி நீர் கானல் நீராகிப்போனது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஊடகங்களும் இதை மூடி மறைக்கும் வேலையில் இறங்கின.


கருவிகளின் தரம்


எ°.என்.சி லாவாலின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட கருவிகள் உயர்தரமானதாக இல்லை என்றும், சில கருவிகள் குறைபாடுடையதாக இருந்ததாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முழுமையான விபரங்களைத் தெரியாமல் நாம் இந்த விமர்சனங்கள் மீது கருத்து தெரிவிக்கக்கூடாது. ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கருவிகள் வாங்கியதற்கான இறுதித் தொகை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்காலத்தில்தான் வழங்கப்பட்டது. முழுமையாக பணத்தைத் தருவதற்கு முன்பாக வாங்கப்பட்ட கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தரத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு உத்தரவாதப்படுத்தியிருக்க வேண்டும்.


புனரமைப்புக்கு முந்தைய மின்னுற்பத்தியை எட்டாததால் புனரமைப்புக்கான செலவே வீண் என்ற விமர்சனம் ஆதாரமில்லாதது. புனரமைப்புக்கு முன்பாக 114 மெகாவாட் மின்னுற்பத்தி நடந்தது என்றும், புனரமைப்புக்குப் பிறகு 125 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மின்துறை அமைச்சரே ஜூலை 22, 2005 அன்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் சட்டமன்றத்தில் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்ட எந்திரங்கள் என்பதால் துவக்கத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால் முழுமையான திறனுடன் உற்பத்தி நடக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், கருவிகளின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய ஜனநாயக முன்னணியையே சாரும்.


2001ல் நிறைவு பெற வேண்டிய இந்தத்திட்டம் 2003ல் முடிந்திருக்க வேண்டும் என்பது மற்றொரு விமர்சனமாகும். இந்தக் காலத்தில் உற்பத்தியாகியிருக்க வேண்டிய மின்சாரத்தையும் கணக்கிட்டு லாவாலின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட நஷ்டத்துடன் சேர்க்க சிலர் முயற்சிக்கிறார்கள். திட்டம் தாமதமானது குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மின்துறை அமைச்சர் பிப்.10, 2005 அன்று சட்டமன்றத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : "குறித்த நேரத்தில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பள்ளிவாசல்-செங்குளம்-பன்னியாறு திட்டங்களில் எடுக்கப்பட்டன. இவையெல்லாம் புனரமைப்புத்திட்டங்கள் என்பதால் பழைய எந்திரங்களை அகற்றி, புதிய எந்திரங்களை வைப்பதில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டன. மேலும் சில கருவிகளை உள்நாட்டிலேயே வாங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும், இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் சமாளிக்கப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன."



மலபார் புற்றுநோய் மையம்



நிறைவாக, கனடா நாட்டு உதவி நிறுவனங்களின் நிதிமூலம் அமைக்கப்படவிருந்த மலபார் புற்றுநோய் மையம் பற்றிய சர்ச்சையை எடுத்துக் கொள்வோம். தங்கள் நாட்டிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியான திட்டங்களைப் பெற்றுத்தர இத்தகைய அன்னிய நிதி உதவிகளை கனடா உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகள் பயன்படுத்தி வந்தன. முழுக்க, முழுக்க 1991-96ல் பதவியில் இருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசால் உருவாக்கப்பட்ட குட்டியாடி திட்டத்திலும் இத்தகைய நிதியுதவி என்ற அம்சம் இருந்தது. மலபார் பகுதியில் மின்விநியோகத்தை பலப்படுத்த அதைப் பயன்படுத்துவது என்பதாக அது அமைந்தது. பிஎ°பி திட்டம் குறித்த பேச்சுவார்த்தையை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு துவக்கியதிலிருந்தே இந்த நிதியுதவியும் இடம் பெற்றிருந்தது. இந்த நிதியுதவியின் மதிப்பு 45 கோடியாக இருந்தது. இது ஒட்டுமொத்த திட்டச் செலவில் 30 சதவீதமாகும். திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் கல்வி, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அக்டோபர் 1996ல் நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தையில் இந்த நிதியுதவி பற்றியும் விவாதிக்கப்பட்டது. கனடா நிதியுதவியுடன் மலபாரில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பது என்று அதில் முடிவு செய்யப்பட்டது.


103 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை எ°.என்.சி லாவாலின் நிறுவனம் தயாரித்தது. நிலம் வாங்குவதற்கும், மற்ற பிற கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்காகவும் தனது பங்காக 5 கோடி ரூபாயை கேரள அரசு தருவது என்றும், மீதமுள்ள 98 கோடி ரூபாய் கனடா உதவி நிறுவனங்களிடம் இருந்து பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. சிஐடிஏ மற்றும் கியூபெக் பிரதேச அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மலபார் புற்றுநோய் மையம் தொடர்பான இந்த விவாதங்களில் கலந்து கொண்டனர். இந்தத்திட்டத்திற்கு ஆலோசனை அளிக்கும் அமைப்பாகவும், கனடா நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை ஏற்பாடு செய்து தரும் நிறுவனமாகவும் எ°.என்.சி லாவாலினை நியமிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துடன் மாநில அரசு மேற்கொண்டது. மேலும் ஆலோசனைகள் நடத்தி இதை முழு ஒப்பந்தமாக மாற்றிக்கொள்வதாகவும் இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நிதியுதவி பெறுவது என்பது வெளிப்படையான ஒரு விஷயமாகவும், எ°.என்.சி லாவாலின் நிறுவனத்துடனான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவுமே அமைந்தது. மேலும், அமைச்சரவை முடிவின்படியே இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்தன.


உறுதியளித்தபடி கனடாவிலிருந்து வர வேண்டிய நிதியுதவி முழுமையாக வரவில்லையென்பதால் மலபார் புற்றுநோய் மையம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. போக்ரான் அணுகுண்டு சோதனையால் ஏற்பட்ட எதிர்பாராத விளைவால் மருத்துவமனைத்திட்டம் துவங்கப்படுவது தாமதமானது. இருந்தாலும், சுமார் 15 கோடி ரூபாய் கனடா நிதியுதவி பெறப்பட்டு, மருத்துவமனையின் கட்டுமானப்பணிகளில் முதல்கட்டம் நிறைவு செய்யப்பட்டது.


இந்த நிலையில்தான் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்கிறது. அரசியல் காரணங்களுக்கான இந்த மருத்துவமனைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அக்கறை காட்டவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவதைப் புறக்கணித்தனர். அந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முழுமையான ஒப்பந்தமாக மாற்றப்படாததோடு, அந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் காலாவதியானது. முதல் கட்டம் நிறைவு பெற்றது குறித்த கடிதத்தைக்கூட கேரள அரசு அனுப்பாமல் விட்டது. மருத்துவமனை என்பது ஒரு கூட்டுத்திட்டம். அதனால் கனடா நிதியுதவியைப் பெறுவதில் கேரள அரசும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற நிலையை எ°.என்.சி லாவாலின் நிறுவனம் எடுத்தது. டிசம்பர் 2002ல் மாநில முதல்வர் ஏ.கே.அந்தோணிக்கு அந்த நிறுவனம் எழுதிய கடிதத்தில், (அ) கூடுதலான கூட்டங்களை அடிக்கடி நடத்தி ஆலோசிப்பது, (ஆ) நகல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, (இ) நிதியுதவி பெற கூட்டாக செயல்படுவது, (ஈ) பணிகளை முடுக்கி விடுவது ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. இதற்கு எந்தவிதமான பதிலையும் கேரள அரசு தரவில்லை. இந்த நிலையில், அன்னிய நிதியுதவி பெறுவது தொடர்பான இந்திய அரசின் புதிய கொள்கை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு அமைப்புகளுக்கு கனடாவிலிருந்து நிதியுதவியைப் பெற்றுத்தர முடியாது என்று கனடாவின் ஹை கமிஷனர் கேரள அரசுக்கு தெரிவித்தார். இந்திய அரசின் புதிய கொள்கை புதிய திட்டங்களுக்குத்தான் என்றும், ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு இல்லை என்று பதில் அளிக்கக்கூட கேரள அரசு முன்வரவில்லை.


மருத்துவமனைக்கான நிதியை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி எடுத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஆதாரமற்றவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அமைப்புகளுக்கே கனடா நிதியுதவியை தர முடியும். மேலும் அன்னிய நிதிபங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்(குஊசுஹ) விதிமுறைகளுக்கு உட்பட்டே இது நடந்தது. மருத்துவமனையைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் சென்னையில் உள்ள டெக்னிகாலியா கன்சல்டன்ட்° என்ற நிறுவனத்திற்குத் தரப்பட்டது. இதற்கான கனடா நிதியுதவி அந்த நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏப்.26, 2001 தேதியிட்ட ஆணை எண், 11/21022/94(506)/2000-குஊசுஹ இந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்ட 13 கோடி ரூபாயை சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அன்னிய நிதிபங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, அன்னிய நிதிகளுக்காக தனியாக கணக்கு மற்றும் ஆவணங்களை மலபார் புற்றுநோய் மையம் வைத்திருக்க வேண்டும் என்று இந்த ஆணை கூறியது. ஒரே ஒரு சிறப்பு கணக்கு வைக்கப்பட்டு நிதிப்பயன்பாடு குறித்து விதிமுறைகளின்படி அறிக்கை தர வேண்டும். நிதியுதவி கிடைத்தவரை அதை எந்தவிதமாகவும் தவறாகப்பயன்படுத்தவில்லை. அமைச்சரவையின் முடிவுப்படி அமைக்கப்பட்ட மலபார் புற்றுநோய் மைய சொசைட்டியின் நிர்வாகக் கவுன்சிலுக்கு தலைவராக மாநில முதல்வரும், அதன் உறுப்பினராக மின்துறை அமைச்சரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிதியுதவியை பெற்றுத்தருவதாக ஒப்புக் கொண்ட எ°.என்.சி லாவாலின் நிறுவனத்தின் உற்சாகம் சிலகாலம் கழித்து மறைந்து விட்டதாகத் தெரிகிறது. நிதியுதவியைப் பெற்றுத்தரும் விஷயத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு விரும்பவில்லை. எ°.என்.சி லாவாலின் நிறுவனத்தின் செயல்பாடு அல்லது செயல்பாடின்மையை எந்தவிதத்திலும் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி நியாயப்படுத்தவில்லை. எனினும், மலபார் புற்றுநோய் மையத்திட்டத்தை முடக்க ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்ட முயற்சி அம்பலமானது. அரசியல் காரணங்களுடனான குறுகிய மனப்பான்மையோடு அவர்கள் செயல்பட்டதால் இந்தத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணியின் இந்த செயல்பாடின்மையை எங்கள் கட்சி வெளிப்படையாகவே பலமுறை விமர்சித்துள்ளது. இவ்வாறு கடுமையான விமர்சனங்கள் வெளியான நிலையில்தான், மலையாள மனோரமா நாளிதழ்கூட மருத்துவமனை விஷயத்திற்கு அரசியல் சாயம் பூசும் அரசின் நடவடிக்கையை விமர்சித்து 2002 ஆம் ஆண்டில் ஒரு தலையங்கத்தையே எழுதியது. மருத்துவமனைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாததது மலபாரில் ஒரு பெரிய உணர்வுபூர்வமானதாகவும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாகவும் இருந்தது. இதற்கு ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசே பொறுப்பாகும்.


நஷ்டங்கள் என்ற பெயரில் அவதூறு


லாவாலின்-பிஎ°பி திட்டங்களால் கேரள மாநிலத்திற்கு 374 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருப்பதாக இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக அதிதீவிர அவதூறுப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. திட்டத்தின் மதிப்பே 259 கோடி ரூபாய்தான். அதில் 374 கோடி ரூபாய் நஷ்டம் என்பது பொதுப்புத்தியையே கேவலப்படுத்துவதாக உள்ளது. திட்டம் தாமதமானதால் கிடைக்காமல் போன மின்சாரம், ஒப்பிடமுடியாத நீர்மின் புனரமைப்புத்திட்டங்களுக்கான எந்திரங்களுக்கு ஆகும் செலவுடன் ஒப்பீடுசெய்து மிகைப்படுத்தப்பட்ட உத்தேச செலவு ஆகியவற்றின் மூலம் இந்தத் தொகையைக் குறிப்பிடுகிறார்கள். தணிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய நேரத்தில் கேரள மாநில மின்சார வாரியம் மற்றும் மின்துறை ஆகியவை பதில் அளித்திருந்தால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கே இடம் இல்லாமல் போயிருந்திருக்கும்.


தனது அரசியல் நோக்கங்களுக்காக லாவாலின் வழக்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி எழுப்பிவருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்தத் திட்டத்திற்கு எதிராக விமர்சனம் செய்தது. அவர்களின் அரசு பதவியேற்றவுடன், லாவாலின் ஒப்பந்தம் குறித்து விஜிலென்° விசாரணைக் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஏ.கே.அந்தோணியிடம் பல ஐக்கிய ஜனநாயக முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். பாசனம் மற்றும் மின்துறை சம்பந்தப்பட்ட சட்டமன்றக்குழுவும் இதை விவாதித்தது. நீண்ட விவாதத்திற்குப்பிறகு, ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட அந்தக்குழு எந்தப் பரிந்துரையையும் செய்யாமல் தேவையான நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பை குழுத்தலைவரிடம் விட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைமை எட்டு மாதங்கள் எடுத்துக் கொண்டபிறகு, மார்ச் 2003ல் விஜிலென்° விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முடிவுக்கு அரசியல் நோக்கம் இருந்தது என்பது தெளிவானதாகும். பழங்குடியினருக்கு எதிராக முத்தங்கா காவல்துறையினர் நடத்திய வன்முறையைத் தொடர்ந்து எழுந்த வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டத்தால் ஐக்கிய ஜனநாயக முன்னணி நெருக்கடியில் இருந்தது. விஜிலென்° விசாரணை என்ற பெயரில் இந்த விவகாரத்தை இரண்டரை ஆண்டுகள் இழுத்துக் கொண்டு சென்றார்கள். 2004 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலை ஆகியவற்றால் மீண்டும் விஜிலென்° விசாரணையைக் கையில் எடுத்தார்கள்.


ஆங்கிலத்திலிருந்து தமிழில் : கணேஷ்

-------------

குறிப்பு : 2006 கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கேரள அமைச்சர் எம்.ஏ.பேபியால் எழுதப்பட்ட கட்டுரை. மேலும் தோழர் பினராயி விஜயன் மீது எந்தக்குற்றமும் இல்லை என்று கூறிய விஜிலன் விசாரணை அறிக்கை வெளியாவதற்கு முன்பே இது எழுதப்பட்டுள்ளது.

Wednesday, June 3, 2009

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கலியோ... 40 லட்சம்தான்...




மாணவர்களிடமிருந்து தனியார் கல்லூரிகள் பணம் கறக்கும் வேலைக்கு தடை விதித்து விட்டோம் என்று தமிழ்நாடு மாநில அரசு கூறிக்கொண்ட ஒரு வாரத்திற்குள்ளேயே மாநிலத்தின் இரண்டு முன்னணி கல்லூரிகள் நன்கொடை கேட்ட விவகாரத்தில் சிக்கியுள்ளன. ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை கேட்டதை கேமராவில் பதிவு செய்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.


ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி 20 லட்ச ரூபாயும், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் 40 லட்ச ரூபாயும் மாணவர்களிடம் இருந்து கேட்டுள்ளன. இரு கல்லூரிகளிலும் 150 இடங்கள் உள்ளன. இதில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக்கல்லூரிக்கு திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துணை அமைச்சரான ஜகத்ரட்சகன்தான் தலைவராக இருக்கிறார். ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் தொழிலதிபர் வெங்கடாச்சலம் ஏற்படுத்தியுள்ள டிரஸ்டுக்கு சொந்தமானதாகும்.


பல்கலைக்கழகத்தில் சேர வரும் மாணவர்களிடம் துணைப்பதிவாளர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாற்பது லட்சம் ரூபாய் என்பதைக்கூறும் அவர் பேரம் பேசுவதற்கெல்லாம் வாய்ப்பு தருவதாக இல்லை. பல்மருத்துவத்திற்கு மதிப்பெண்களைப் பொறுத்து நன்கொடையைக் கூட்டிக் குறைத்துக் கொள்கிறார். ஸ்ரீபாலாஜி கல்லூரியில் ஏஜண்ட் லட்சுமியைப் போய்ப் பார்க்குமாறு கூறுகிறார்கள். பேரம் பேசும் பொறுப்பு லட்சுமியிடம் விடப்படுகிறது. கல்லூரியில் இதைக் கவனித்துக் கொள்ளும் நிர்வாக அதிகாரி ஜான்சன், 20 லட்சத்துக்கு குறையாமல் வாங்குமாறு அமைச்சர் எங்களிடம் கூறியுள்ளார். பரிந்துரைகள் எல்லாம் ஒன்றும் நடக்காது. நீங்கள் லட்சுமியைப் பாருங்கள் என்கிறார். அவர் தரும் சலுகை ஒன்றே ஒன்றுதான். 2010 ஜனவரிக்குள் மூன்று தவணைகளில் பணத்தைக் கட்டிக் கொள்ளலாம் என்பதுதான்.


தி.நகரில் உள்ள அலுவலகத்தில் லட்சுமியை மாணவர்கள் சந்திக்கிறார்கள். ஜான்சனால் அனுப்பப்பட்ட மாணவர் ஒருவர் 14 லட்ச ரூபாய் தரத்தயார் என்று கூறியபோது, இந்தத் தொகைக்கு உங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எந்த உத்தரவாதமும் தர முடியாது. வேண்டுமானால் முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாய் தந்துவிட்டுச் செல்லுங்கள். நீங்கள் கூறும் தொகைக்கு தர முடியுமா என்பதைப் பரிசீலிக்கிறோம். முன்பணம் தராவிட்டால் தொகையின் அளவு அதிகரித்து விடும் என்கிறார்.


ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் மேலும் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். அவருடைய பேட்டியை டைம்ஸ் ஆப் இந்தியா கேமராவில் பதிவு செய்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு என்பது வெறும் கண்துடைப்பேயாகும். தரம் பற்றியெல்லாம் இங்கு பார்ப்பதில்லை. நான் வெளிநாடுவாழ் இந்தியர். நான் 75 லட்ச ரூபாய் செலுத்தினேன். மற்றவர்களுக்கு 45 லட்ச ரூபாய். தற்போது 40 லட்ச ரூபாயாக இது குறைந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன் என்கிறார் அவர்.


இவ்வாறு வழங்கப்படும் பணத்தை காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ அவர்கள் பெற்றுக் கொள்வதில்லை. பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக ரசீது எதுவும் தரமாட்டார்கள். உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசின் உத்தரவுகளை மீறி இந்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனின் கருத்தைக் கேட்க டைம்ஸ் ஆப் இந்தியா முயன்றபோது தொடர்பு கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

-------------

ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில்(எஸ்.ஆர்.யு) பணத்தைப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பில் துணைப்பதிவாளர் இருக்கிறார். அவருக்கும் மாணவருக்கும் இடையில் நடந்த உரையாடல்.

எஸ்.ஆர்.யு துணைப்பதிவாளர்(சேர்க்கை) துணைப்பதிவாளர் ஏ.சுப்பிரமணியன் : நன்கொடை கொடுப்பதாக ஏதாவது திட்டம் உங்களுக்கு உண்டா?

மாணவர் : அது எவ்வளவு இருக்கும்?

துணைப்பதிவாளர் : 40 லட்சம் ரூபாய். அதோடு ஆண்டுக்கு 3.25 லட்சம் ரூபாய் தர வேண்டியிருக்கும். நீங்கள் தயார் என்றால் சேர்க்கைக்கான வேலைகளை நாங்கள் துவங்கமுடியும்.

மாணவர் : பல் மருத்துவத்திற்காக படிப்புக்கு என்ன நிலைமை...?

துணைப்பதிவாளர் : பல்மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, இந்த மதிப்பெண்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும். படிப்புக்கட்டணமாக ஆண்டுக்கு 3.25 லட்சம் ரூபாயும் தர வேண்டும்.

-----------------

ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரி ஜான்சனைப் பார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜான்சனுக்கும் மாணவருக்கும் இடையில் நடந்த உரையாடல்.

ஜான்சன் : தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு மாணவர் சேர்க்கை அலுவலகம் உள்ளது. அங்கு போய் எங்கள் ஏஜண்டைப் பாருங்கள். அவருடைய பெயர் லட்சுமி. அவருடன் நீங்கள் பேசிக் கொள்ளலாம்.

மாணவர் : குறைந்தது எவ்வளவு பணம் தர வேண்டியிருக்கும்..?

ஜான்சன் : நாங்கள் 20 லட்சம் ரூபாய் வாங்குகிறோம். குறைந்தது 16 லட்சமாக இருக்கும். ஆனால் நீங்கள் அவரிடம் பேசுங்கள். நீங்கள் எவ்வாறு பேரம் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும்.

மாணவர் : நாங்கள் எவ்வளவு தொகையைக் குறிப்பிடலாம்...? நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன்...

ஜான்சன் : அவர் பதினைந்து லட்சத்துக்கு கீழே குறைய மாட்டார்..

----------------------

தேர்தலோடு எதுவும் முடியப் போவதில்லை......

'இடதுசாரிகளின் முட்டுக்கட்டைகள் இல்லை, இனி பொதுத்துறை பங்குகள் விற்பனை' என்று அலறுகிறது தினமலர். 15வது மக்களவைக்காக நடந்த தேர்தலின் முடிவுகள் வரத் துவங்கிய மே 16ம் தேதி, யார் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட யார் அதிக எண்ணிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதில் நாட்டின் தொழிலதிபர்களுக்குப் பெரிய வேகம் இருந்தது. 61 என்ற ஓர் எண் வெறும் 20 என்று சுருங்கியவுடன் தான் அவர்களிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. நிலையான ஆட்சி, அதுவும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, அதுவும் முட்டுக்கட்டைகள் போடும் இடதுசாரிகளின் தயவு தேவைப்படாத ஆட்சி என்று அவர்களது ஷாம்பெய்ன் கிண்ணங்கள் அன்று இரவு பொங்கி வழிந்திருக்கக் கூடும்.


இடதுசாரிகளுக்கு ஏன் இப்படி அடி விழுந்தது என்பது பற்றி அந்தக் கட்சிகள் ஒருபக்கம் பரிசீலனையைத் துவக்கியிருக்க, பத்திரிகையில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் எழுதும் பத்தியாளர்கள் அலசல்களை வைத்தவண்ணம் உள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஜூலை 2008ல் திரும்பப் பெற்றது தவறா, அதற்குத் தேர்வு செய்த காரணம் தவறா என்றும் 2004ல் ஆதரவு அளிப்பது என்று எடுத்த முடிவே தவறா என்றும் கேள்விகள் எழுப்புவோர் எல்லோரும் இடதுசாரிகளின் ஆதரவாளர்களுமில்லை, எதிர்ப்பாளர்களுமில்லை. இடதுசாரிகள் மீது விமர்சனம் வைப்பவர்களில் சிலர் சீர்திருத்தக் கொண்டாடிகளாகவே இருந்தபோதிலும் இன்றைய உலக பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்திய நிதித்துறை அவ்வளவு தீவிரமான பாதிப்புகளை அடையாமல் காபந்து செய்திருப்பது யார் என்று அறிந்தவர்கள். அந்த உணர்வின் நிழல் படிந்திருக்கிறது அவர்களது விமர்சனங்களில்.


ஆனாலும், மன்மோகன் தலைமையில் சீர்திருத்தங்களின் படைவரிசையை வெகுவேகமாக முன்னேற்றிச் சென்றுவிட வேண்டும் என்று நிதியிதழ்கள் (FINANCIAL DAILIES) எழுதுகின்றன. "நிதித்துறைக்குப் பொருத்தமாகக் குறைந்தபட்சம் இரண்டு நிர்வாகப் புலிகளாவது மன்மோகன் வசம் இருக்கையில் போயும் போயும் பிரணாப் முகர்ஜியைத் தானா நிதியமைச்சராகக் கொண்டுவர வேண்டும் ? வரும் காலங்கள் சந்தைக்கும் அரசின் பாத்திரத்திற்கும் முரண்பாடுகளைக் கூர்மையாக்கும்போது சந்தையின் சுதந்திரத்தை அனுமதிப்பதா, அரசின் தலையீட்டை நிறுவுவதா என்ற கேள்வி முன்னுக்கு வரும், துரதிருஷ்டவசமாக பிரணாப் போன்ற ஒரு மனிதர் பின்னதற்குத் தான் வாதிடுவார்" என்று பிசினஸ் லைன் நாளேடு தலையங்கம் எழுதிப் புலம்பியது. ஆனால், முகர்ஜி இந்த விமர்சனங்களை எல்லாம் புரிந்து கொண்டு, பெருமுதலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசத் துவங்கிவிட்டார். பிரதமரும் பொருளாதார சீர்திருத்தங்கள் வேகமாகத் தொடரும் என்று தமது முதல் பத்திரிகை செய்தியிலேயே அறிவித்தார்.


ஜூலை 2008ல் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த விவாதங்களுக்கு எழுத்துபூர்வமாக அளித்த தமது பதிலுரையில் டாக்டர் மன்மோகன் சிங் இடதுசாரிகள் தம்மை அவர்களது கொத்தடிமையாக நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பொருள் என்ன? 'இந்திய அரசியல் சாசன சட்டத்தின்முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கிற விதத்தில் நாங்கள் செயல்படுகிறோம், இடதுசாரிகள் விடமாட்டேன்' என்கிறார்கள் என்று அவர் சொல்லமுடியாததன் மொழிபெயர்ப்பு வாக்கியம் அது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற அபாரமான நூலை எழுதிய ஜான் பெர்க்கின்ஸ், நாட்டின் அதிபர்களை உலக வங்கியின் கொடிய கரங்கள் எப்படி வளைத்துப்போட்டன, மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் எப்படி சூறையாடப்பட்டன என்று அப்பட்டமான உண்மைகளைப் பதிவு செய்துவிட்டு, தமது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகரமான இந்த நூலாக்கத்தில் தான் ஏன் இறங்க நேர்ந்தது என்பதை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். தமது பாவங்களைக் கழுவிக் கொள்ளும் இந்த முயற்சிக்குத் தம்மைத் தூண்டியது தமது அன்புமகள் என்றும், இதனால் தான் மரணத்தைத் தழுவ நேர்ந்தாலும் மகிழ்ச்சியே என்றும் எழுதும் பெர்க்கின்ஸ் இப்படி முடித்திருந்தார்: "நியூ ஹாம்ப்ஷயரில் கள்ளம் கபடமற்ற பாலகனாக வளர்ந்த நானா அப்படியொரு அடியாளாக மாறினேன் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது".


சாதாரண மக்கள் லஞ்சத்தையும் ஊழலையும் புரிந்து கொள்கிற பாணியே வேறானது. அவர்களுக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீதும், தாசில்தார் மீதும் ஏற்படுகிற கோபம் நாட்டையே விலைபேசுகிற ஆட்கள் ஏற்படுவதில்லை. அவர்கள் பாவம் தமது அன்றாடத் தேவைகளுக்கு எதிரான வில்லன்களை மீறி பெரிய தாதாக்களை அறிய முடிவதில்லை. இல்லையென்றால், தங்களது வாக்குரிமையை கேவலம் பணத்தை வைத்து யாரையும் விலைபேசி விட அனுமதிப்பார்களா? ஒரே ஒரு புதுச்சேரி சரவணன் கோபப்பட்டு காங்கிரஸ் எம்.பி., (இப்போது அமைச்சர்!) நாராயணசாமி பெயருக்கு லஞ்சப் பணத்தை டிமாண்ட் டிராப்டு எடுத்து முகத்தில் வீசியிருகிறார். அவர் என்ன ஆகப்போகிறாரோ, அவரது தார்மீகத் துணிச்சலைப் பாராட்டி அந்த உணர்வைப் பாதுகாக்கும் பொறுப்பு நாகரிக சமூகத்திற்கு இருக்க வேண்டும்.


வெள்ளைத்துரையை எதிர்த்து கட்டபொம்மன் பேசியதாக எழுதப்பட்ட சிவாஜி கணேசன் வசனத்தை திருமண வீடுகளில் ஒலிச்சித்திரம் போட்டுக் கேட்டுக் கொள்ளவும், பள்ளிக்கூடங்களில் மாறுவேடப் போட்டிக்கு ரசித்துக் கொள்ளவும் மட்டும் பழக்கிக் கொண்டிருக்கிற சமூகமாக மாறிவிட்டோம். ஏகாதிபத்தியம் என்று சொன்னால், ஆரம்பிச்சிட்டாங்கய்யா என்று அலுத்துக் கொள்கிற மத்திய தர வர்க்கம், உலக நிதி நெருக்கடியின் சூத்திரக் கயிறு எங்கே இருக்கிறது என்று விவாதிக்கத் தயாராயில்லை. ஐ டி துறை வேலைகளின் திடீர் மகிழ்ச்சி போலவே அதன் திடீர் அதிர்ச்சியையும் தனித்தனி நபர்களின் அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே விளங்கிக் கொள்ள விரும்புகின்றனர்.
அதனால்தான், தினமலர் போன்ற ஒரு நாளேடு மக்களுக்கு எதிரான விஷயங்களையே சாதுரியமாகத் தலைப்பிட்டு அவர்களிடமே விற்றுப் பிழைக்க முடிகிறது. இடதுசாரிகள் தாம் சந்தித்த தேர்தல் தோல்வியைக் குறித்த படிப்பினைகளோடு மீண்டும் இயக்கத்தைத் தொடரவே செய்வார்கள். அவர்களது போராட்டங்கள் நாடாளுமன்றத்தோடு மட்டும் எப்போதும் சுருங்கியிருக்கவில்லை. அங்கே அவர்களது பாத்திரம் இப்போது மட்டுப்பட்டுப் போயிருப்பதில் சாதாரண மக்கள் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை.
ஏற்கெனவே காசுள்ளவர்களுக்கே கல்வி என்று தனியார் கல்வி வள்ளல்களின் கருணையின் கீழ் வாழத் தள்ளப்பட்டிருக்கிற தேசத்தில், அந்நிய பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்து விடுவோம் என்றும், கல்வியில் அந்நிய நிதி முதலீட்டை வரவேற்போம் என்றும் புதிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆரம்பித்து வைக்கிறார். எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களைப் பங்கு விற்பனை செய்யப்போகிறோம் (அதாவது தனியார்மயப்படுத்தப் போகிறோம்) என்ற அறிவிப்பையும் புதிய, நிலையான மற்றும் இடதுசாரிகளின் தயவு தாட்சண்யம் தேவைப்படாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்திருக்கிறது.



நிதித்துறை சீர்திருத்தமும், பென்ஷன் சீர்திருத்தமும் உடனடி நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்றும், இதற்கெல்லாம் அடிப்படையாக முதலில் தொழிலாளர் சட்டங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்கும் முன்னுரிமை வேண்டும் என்றும் உறுதியாகப் பேசத் தொடங்கிவிட்டனர். பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட், துணைவங்கிகளை ஸ்டேட் வங்கியோடு இணைக்க வேண்டுமென்ற தனது வீர சபதத்தை முதற்கண் நிறைவேற்றிக் கொள்ளத் தயாராக நிற்கிறார். அமெரிக்காவில், கடந்த ஆண்டு முழுக்க கவிழ்ந்த வங்கிகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு ஜூன் துவங்குமுன் கவிழ்ந்த வங்கிகள் எண்ணிக்கை மிஞ்சிவிட்டது. ஆனாலும், இந்தியாவிலோ நிதித்துறையை ஒழித்துக் கட்டத் துடியாய்த் துடித்தவர்களே ஆட்சிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


உலகின் அசுர மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. மணிக்கணக்கில் ஊதியம் பெறும் 61,000 பேருக்கும், நிரந்தர தொழிலாளர் சில ஆயிரம் பேருக்கும் கணக்குகளை 'செட்டில்' பண்ணிக் கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. கம்பெனியின் அதிகப்படி பங்குகளை அரசுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்ல வேண்டிய நிலையில் முதலாளித்துவக் கோட்டையின் அதிபர் பாரக் ஒபாமா இருக்கிறார். அமெரிக்காவில் தங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த மக்களின் மருத்துவச் செலவுகள் முதற்கொண்டு எல்லாத் தேவைகளுக்கும் முழு நாமம் போட்டுவிட்டு ஏய்த்த நிறுவனங்களை இங்கும் வரச் சொல்கிறது இந்திய அரசு. நிதித்துறை, எண்ணெய், தகவல் தொலை தொடர்பு, விமானத் துறை எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் படுவேகத்தில் பறக்கும் என்று பிசினஸ் லைன் நாளேடும் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறது.


தொலைதூர இலத்தீன் அமெரிக்காவில் ஈக்குவடார் என்ற மிகச் சிறிய நாடு ஒன்று இருக்கிறது. இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் ராஃபேல் கொரியா, கொள்ளை லாப அந்நிய கம்பெனிகள் தேச சொத்துக்களாக மாற்றப்படும் என்று அரசியல் சாசன சட்டத்திலேயே வழிவகை செய்யும் திருத்தம் செய்துதான் தேர்தலையே சந்தித்து அதிரடி வெற்றி பெற்றிருகிறார். வெற்றி பெற்றதும் நாட்டின் பட்ஜெட்டில் சரிபாதி செலவினங்கள் கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத்திட்டங்களுக்கே என்று முதல் அறிவிப்பும் விடுத்திருக்கிறார். கிழக்கே வலுமிக்க பொருளாதாரமாகப் பேசப்பட்ட ஜப்பானிலிருந்தும் ஒரு செய்தி வந்திருக்கிறது. பத்தாண்டுகளாகத் தங்கள் நாட்டில் வேலை பார்த்துவரும் சுமார் 3 லட்சம் அந்நிய தேசத்தவரை (பெரும்பாலும் பிரேசிலைச் சேர்ந்தவர்கள்) அவர்களது தாயகத்திற்கு நடையைக் கட்டுமாறு பயணச்செலவும் நஷ்ட ஈடும் கொடுத்துத் துரத்திக் கொண்டிருக்கிறது நெருக்கடியில் சிக்கித் திண்டாடும் ஜப்பான்.


இப்படி இரண்டு வழிகள் இருக்கின்றன - இந்தியா எதைத் தேர்வு செய்யப் போகிறது? நாம் கேட்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசை அல்ல, அவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டு உட்கார்ந்திருக்கும் அதன் சாதாரண - நாளொன்றுக்கு இருபது ரூபாய் கூட ஈட்ட இயலாதிருக்கிற 83.6 கோடி பேரையும் உள்ளடக்கிய - தங்கள் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிற பாமர மக்களைத்தான்.
தேர்தலோடு எதுவும் முடிந்துவிடுவதில்லை, ஆட்சியாளர்களுக்கும் சரி, அவர்களைப் பதவியில் அமர்த்தியவர்களுக்கும் சரி.


(திரு.எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் Bank workers unity பத்திரிகைகாக எழுதிய கட்டுரை இது.)