Tuesday, July 21, 2009

தினமலரின் டாப்-டென் புளுகுகள்

அண்டப்புளுகுகளையும், ஆகாசப் புளுகுகளையும் கொண்டு "நிறம் மாறுது சிவப்பு" என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு ரீல் விட்டுள்ளது தினமலர் நாளிதழ்(ஜூலை 19). வலியப்புனைந்து எழுதப்பட்டுள்ள இந்த கற்பனைக் கட்டுரை அப்பத்திரிகையின் வாசகர்களை தவறான வழியில் அழைத்துச் செல்லவே முயல்கிறது.

இந்த ஒருபக்கக் கட்டுரையிலிருந்து வெறும் பத்து புளுகுகள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.

1. புளுகு - அச்சுதானந்தனை பொலிட்பீரோவில் இருந்து மட்டுமின்றி கட்சிப்பொறுப்பு எதிலும் இருக்காமல் நீக்கி விட்டது,

உண்மை - பொலிட்பீரோவில் இருந்து மட்டும்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்தியக்குழுவில் அவர் இன்னும் நீடிக்கிறார். அதோடு கேரள மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழுக்களிலும் அவர் தொடர்கிறார்.

2. புளுகு - அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியவர்கள்.

உண்மை - இது கடைந்தெடுத்த பொய். தற்போதுள்ள அமைச்சர்கள் யார் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

3. புளுகு - தனியே கட்டம் கட்டி பினராயி விஜயன் "மகனுக்கு அமெரிக்க படிப்பு" என்று தலைப்பு போட்டுள்ளது.

உண்மை - கட்டத்திற்குள் உள்ள செய்தியிலேயே உண்மை உள்ளது. பிரிட்டனில்தான் அவர் கல்வி கற்றுள்ளார். தினமலருக்குதான் அமெரிக்க பாசம் பொங்கி வழிகிறது.

4. புளுகு - சீன போரில் கம்யூ. வேஷம் என்ற தலைப்பிலான தனி பாக்ஸ் செய்தி உள்ளது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு எழுந்தபோது கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த ஜோதிபாசு உடனே கேரள முதல்வராக இருந்த நம்பூதிரிபாடை போனில் அழைத்துப்பேசினார் என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உண்மை - ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி, பிரிந்தபிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி ஜோதிபாசு பொதுச்செயலாளர் பொறுப்பை வகிக்கவேயில்லை. மேலும் இவர்கள் சொல்லும் காலகட்டத்தில் இ.எம்.எஸ். கேரள முதல்வர் பொறுப்பிலும் இல்லை.

5. புளுகு - மக்களவைத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்று கூட சரிவர முடிவுக்கு வரமுடியாத நிலை உள்ளது.

உண்மை - அகில இந்திய நிலை குறித்து மத்தியக்குழுவும், ஒவ்வொரு மாநில நிலைமை குறித்து அந்தந்த மாநிலக்குழுக்களும் ஆய்வை நிறைவு செய்து அடுத்த கட்ட வேலைகளைத் துவங்கிவிட்டன.

6. புளுகு - முதல்வர் அச்சுதானந்தன் சபரிமலை சென்று வந்த நிகழ்வை சபரிமலை சர்ச்சை நாயகன் என்ற பெயரில் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது.

உண்மை - அதில் சர்ச்சை எழவில்லை. முதல்வர் என்ற முறையில் சபரிமலை பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அறிய நடந்தே சென்று வந்தார்.

7. புளுகு - 374 கோடி ரூபாய் லால்லின் ஊழல் வழக்கில் சிக்கிய போதும்... என்று தினமலரின் செய்தி செல்கிறது.

உண்மை - திட்டத்தின் மொத்த மதிப்பையே போட்டு அவ்வளவு ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகத் தொடர்ந்து கயிறு திரிக்கிறார்கள். அதோடு, இதை விசாரிக்கும் சிபிஐயே பினராயி விஜயன் எந்தவித சொந்த ஆதாயமும் பெறவில்லை என்றும் கூறியிருக்கிறதே...

8. புளுகு - கேரளாவில் பினராயி நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து மேலிடம் என்றுமே கண்டு கொண்டதில்லை,

உண்மை - வெளிப்படையாக விவாதம் நடத்திய காரணத்திற்காக பொலிட்பீரோவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டாரே... ஒருபக்கக் கட்டுரையில் அந்தச் செய்தியும்தான் இருக்கிறது.

9. புளுகு - கேரளாவில் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உண்மை - அப்படியொன்றும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

10. புளுகு - ஏழைகள் கட்சி என்ற போக்கில் இருந்து மார்க்சிஸ்ட் விலகிச் செல்வது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

உண்மை - மத்திய ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு இருந்தபோது மட்டும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, 100 நாள் வேலைத்திட்டம், அனைத்துத்தரப்பினரின் வங்கி சேமிப்பு பாதுகாக்கப்பட்டது, பழங்குடியினருக்கு பாதுகாப்பு மசோதான்னுதான் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

எந்தவித ஆதாரமுல் இல்லாமல், கேரளாவில் அந்த கட்சி ஒன்றுமில்லாமல் ஆவதற்கான அறிகுறி, பினராயிக்கு காரத் முழு ஆதரவு தருகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது, பினராயி மீது ஊழல் புகார்கள் ஏராளம், லாவலின் குறித்து கட்சி மவுனம் சாதிக்கிறது என்றெல்லாம் வதந்திச் சேற்றை வாரி இறைத்துள்ளது.

நிதானமாக, அதே நேரத்தில் உறுதியாக மார்க்சிஸ்ட் கட்சி நடைபோடுவதால்தான் தினமலர் போன்ற பத்திரிகைகள் பதற்றத்தால் பரபரப்பாகி உள்ளன. தங்கள் பதற்றத்தை மறைக்கவே கட்சியினர் மத்தியில் சலசலப்பு, பரபரப்பு என்றெல்லாம் இவர்களாகவே கிளப்பி விட்டுப்பார்க்கின்றனர்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி செய்தியைப் போட்டாலும் அவரது படத்தையோ, பெயரையோ வெளியிடுவதில்லை என்று கொள்கை முடிவை எடுத்துள்ள தினமலர், விளம்பரம் தந்தால் மட்டும் வேண்டாம் என்று சொல்வதில்லை. சாக்கடையில் கொள்கையை வீசி எறிந்து விடுவார்கள்.

பணம் வருகிறதே ... கொள்கையாவது, மண்ணாவது..

இதுபோன்று மார்க்சிஸ்ட் கட்சியை நினைத்துவிட்டார்கள் போலும்.

3 comments:

  1. dinamalar is mother fucker

    ReplyDelete
  2. நீங்க சொன்ன செய்தி போல ,தமிழ் நாட்டுல இருக்க தினமலரு கேரளசெய்தி தான் அதிகம் வரும் .......... இதுபோல ,

    ReplyDelete