Thursday, July 16, 2009

ஆறு வித்தியாசங்கள்... கண்டுபிடியுங்களேன்!


"என்ன பாலு சவுக்கியமா.."

பாலு : வாங்க... மணி..(ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள்)

சலூன்காரர் : சார் எப்ப பாத்தாலும் உங்க வீட்டுல எத்தன சேனல்லே பேசுட்டுருக்கீங்களே... வேற மேட்டரே கிடைக்காதா...?

மணி : ஏம்பா... நானே இன்னக்கி வேற ஏதாவதுதான் பேசணும்னுதான் வந்தேன்...

பாலு : அதெல்லாம் சரி... ஆறு வித்தியாசங்கள், கண்டுபிடிங்களேன்...

மணி : என்ன.. படம் காட்டப் போறீங்களா...

பாலு : இல்லப்பா... ஓட்டுப்போட்டு புது அரசாங்கத்த கொண்டு வந்துட்டோம்... முன்னாடி இருந்தவங்கதான் இப்பவும் வந்துருக்காங்க... ஆனாலும் வித்தியாசம் இருக்கே... அதான் ஆறு வித்தியாசம் சொல்லுண்ணேன்...

மணி : எப்பா... வித்தியாசம் அதிகமா இருக்கும்போலருக்கே...

பாலு : சரிப்பா... குறைஞ்சது ஆறு வித்தியாசத்த சொல்லுப்பா...

மணி : சி.எம்.பிதான் முதல் வித்தியாசம்... போன தடவ குறைந்தபட்ச பொது செயல்திட்டம்னு ஒண்ணு இருந்துச்சு...இப்ப இல்ல...

பாலு : சரியா சொன்னீங்க... முக்கியமான வித்தியாசம்தான்..

மணி : இஷ்டத்துக்கு பொதுத்துறை பங்குகள விக்க முடியாதுங்குற நிலை இருந்துச்சு... இப்ப பட்ஜெட்ல அறிவிக்காமயே தனி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்க..

பாலு : பெட்ரோல் விலையுயர்வத்தான் ரெண்டாவதா சொல்வீங்கன்னு நெனச்சேன்...

மணி : ஆமா சொல்லிருக்கணும்...வரலாற்றுல முதமுறையா போன ஆட்சிலதான் விலையக் குறைச்சாங்க... இந்த முறை எடுத்தவுடனே கோணல்தான்...

பாலு : ஆமா... போன தடவ ரெண்டு முறை விலை குறைஞ்சுது... அதுவரைக்கும் நமக்கு இருந்த அனுபவமே விலை ஏற்றம்தான்...

மணி : சாமான்ய மனிதர்களுக்கு உதவுற திட்டங்கள் போன தடவ வந்துச்சு... இத நாலாவது வித்தியாசமா சொல்லலாம்...

பாலு : வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்த சொல்றீங்களா...

மணி : ஆமா... கிராமப்புறத்துக்கான இந்தத்திட்டம் நகர்ப்புறத்துக்கும் வந்துரும்னு அறிகுறிலாம் இருந்துச்சு... இப்ப அது மறைஞ்சுருச்சு...

சலூன்காரர் : சார்.... நீங்க உக்காருங்க... இங்க உக்காந்துக்கிட்டே வித்தியாசத்தக் கண்டுபிடிங்க... நானும் என் வேலையப் பாக்குறேன்....

மணி : ஆன்லைனுல அத்தியாவசியப் பொருட்கள விக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்துச்சு...

பாலு : இப்ப ஒவ்வொண்ணா சத்தமில்லாம எடுத்து விட்டுட்டாங்க... அப்படித்தான...

மணி(சலுhன்காரரைப் பார்த்து) : ஏம்பா... நாங்க ரெண்டு பேரு பேசுறதயும் கேட்டுக்கிட்டே இருக்கியே... ஏதாவது சொல்லேன்...

சலூன்காரர் : சார்... நீங்க சொல்றத நான் எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்... அஞ்சு சொல்லிட்டீங்க... என்கிட்ட கேட்டுருந்தா முத வித்தியாசமே போன தடவ இடதுசாரிக்கட்சிக்காரங்க ஆதரவுல ஆட்சி இருந்துச்சு... இப்ப இல்லன்னு சொல்லிருப்பேன்...

பாலு : சபாஷ்... இவ்வளவு நேரம் மணி சொன்ன வித்தியாசங்கள்லாம் இருக்குறதுக்கு இந்த வித்தியாசம்தான காரணம்... அவங்க ஆதரவோட ஆட்சி இருந்ததுனாலதான் 100 நாள் வேலைத்திட்டம் வந்துச்சு.. மக்கள் சொத்தான பொதுத்துறைக்கு பாதுகாப்பு...

சலூன்காரர் : ஆமா சார்... குறிப்பா அந்த பெட்ரோல் விலைக்குறைப்பு இருக்கு பாருங்க... நெனச்சுப் பாக்க முடியுமா...

மணி : பாத்தீங்களா பாலு... எந்த விஷயம் சாமான்ய மக்கள பாதிச்சுருக்குன்னு...

பாலு : பெட்ரோல், டீசல் விலை கூடுச்சுனா அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் விலை ஏறிடுமே...

மணி : ஆமா... ஆனா கேட்டா பணவீக்கம் குறைஞ்சுருச்சுன்னு புள்ளிவிபரத்த அள்ளித் தெளிக்குறாங்க...

பாலு : சரி.. மணி.. நேரமாச்சு... கிளம்புட்டுமா...

மணி : வாங்க... அடுத்த தடவ வேற மேட்டர் பேசலாம்.. வாங்க..

No comments:

Post a Comment