Friday, October 23, 2009

"வளர்ச்சி"க்காக வளர்ச்சியை சிதைக்கும் மாவோயிஸ்டுகள்!



மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக திரண்டுள்ள சில அறிவுஜீவிகள் அந்த வன்முறைகள் நிகழும்போதெல்லாம் மவுனம்தான் சாதிக்கின்றனர். நாட்டிலுள்ள 625 மாவட்டங்களில் 161 மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த மாவோயிஸ்டுகள் கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்துள்ளனர். வளர்ச்சிப்பணிகளை அரசுகள் செய்திருந்தால் இந்த வன்முறைகள் நிகழ்ந்திருக்காதே என்று அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.


வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என்ற மாவோயிஸ்டுகளின் குற்றச்சாட்டு ஒருபுறம். மறுபுறத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை தரைமட்டமாக்கும் வேலையை மாவோயிஸ்டுகள் செய்கின்றனர். ரயில்வே தண்டவாளங்கள், தொலைபேசிக் கோபுரங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், கனிம சுரங்கங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றைத் தகர்த்து எறிகிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய இடங்களைக் குறிவைத்து 183 வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, அந்த மக்களுக்கான பள்ளிக்கூடங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் ஆகியவைதான் இந்த வன்முறைத் தாக்குதல்களின்போது குறிவைக்கப்பட்டன. மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மக்கள் பணத்திலிருந்தே இந்தக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வேலையையே செய்கின்றன.


இவர்கள் தாக்குதல்கள் நடத்தும் பகுதிகளில் நூறு நாள் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சில மாநிலங்களில் இந்தத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் மாவோயிஸ்டுகளால் சிதைக்கப்பட்டன. அரசை ஸ்தம்பிக்கச் செய்கிறோம் என்று இவர்கள் நடத்தும் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகளை இவர்களுக்கு ஆதரவாக இயங்கும் அறிவுஜீவிகள் கண்டுகொள்வதேயில்லை.


இவர்கள் "வளர்ச்சி" என்று சொல்வது மாவோயிஸ்டு அமைப்பின் வளர்ச்சியைப் பற்றியதாக இருக்குமோ...?

3 comments:

  1. இவர்கள் "வளர்ச்சி" என்று சொல்வது மாவோயிஸ்டு அமைப்பின் வளர்ச்சியைப் பற்றியதாக இருக்குமோ...?

    நிச்சயம்....

    ReplyDelete
  2. dearganesh, even the respected Noam Chomski is also supporting the voilent moast. kindly go through the open letter written by prof.Nirmalanghu Mukergy,dept. of philosophy.delhi uty to chomski.u can refer this letter from Vimal VIDYA...kashyapan.

    ReplyDelete
  3. THE KETTLE CALLS THE POT "BLACK"... HA HA !!!

    ReplyDelete