Saturday, October 24, 2009

அணுகுண்டா... இது வீண் பழியே...!


வெனிசுலாவில் யுரேனியம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்ற செய்தி வெளியானவுடனேயே ஈரானுக்கு யுரேனியத்தை வெனிசுலா ஏற்றுமதி செய்யப்போகிறது என்றும், சொந்தமான அணுகுண்டைத் தயாரிக்க வெனிசுலா திட்டமிட்டுள்ளது என்றும் மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் துவங்கிவிட்டன. அந்த யுரேனியம் பயன்படுமா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட இன்னும் ஆய்வுகள் முடியவில்லை. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று சாவேசை கேள்வி கேட்டும் பத்திரிகையாளர்கள் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவருடைய பதில் மிகவும் தெளிவாக இருந்தது. "அணுகுண்டை வெனிசுலா ஒருபேதும் தயாரிக்காது. அடுத்தவர்களைக் குறை சொல்லி தங்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் நாடுகள் இத்தகைய பொய்ப்பிரச்சாரத்தை செய்கின்றன. யுரேனியத்தை நாங்கள் தவறாகப் பயன்படுத்தப்போவதாக மேற்கத்திய ஊடகங்கள் எங்களைக் குறை சொல்லப் போகின்றன. இப்பொழுதுதான் யுரேனியம் எங்கள் மண்ணில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்குள்ளாக எங்கள் நாட்டுக்கெதிரான பிரச்சார யுத்தத்தை துவக்கி விட்டார்கள். ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தாண்டி மின்னுற்பத்தி போன்ற மிக முக்கியமான பணிகளை நாங்கள் செய்து கொள்ள முடியும்" என்றார் அவர்.

தங்களிடமிருக்கும் யுரேனியத்தை பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொடுங்கள் என்று ரஷ்யாவிடம் வெனிசுலா கேட்கப்போகிறது. தென் அமெரிக்க நாடுகள் இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வருகின்றன. தனது பிடி பெரும் அளவில் நழுவியுள்ளதால் மீண்டும் இறுக்கிப்பிடிக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் முதல்கட்டமாகத்தான் இருக்கும் ஒன்றிரண்டு கூட்டாளிகளில் கொலம்பியாவில் புதிய ராணுவத்தளங்களை அமைக்கிறது. தனது இந்த நடவடிக்கைகளை மறைக்கவே வெனிசுலாவின் அணுகுண்டு என்ற புரளியைக் கிளப்பி விட்டுள்ளது.

மேலும், சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு அமெரிக்காவின் ஒவ்வொரு தலையீட்டையும் கடுமையாகக் கண்டித்து வருகிறது. ஒபாமாவுக்கு சமானத்திற்கான நோபல் பரிசு வழங்கியதை விமர்சித்த அவர், கொலம்பியாவில் ஏழு ராணுவத்தளங்களை அமைக்கப்போகிறோம் என்பது அவரின் நினைவுக்கு வருவது நல்லது என்றார். அதோடு நிற்காமல் தென் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காகவும் வெனிசுலா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ள சுக்ரே என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தப்போவது இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். டாலருக்கு மாற்றாகக் கிளம்பியுள்ள இந்த புதிய நாணயம் அமெரிக்காவுக்கு பீதியைக் கிளப்பியுள்ளது.
அண்மையில் நடந்த அல்பா(தென் அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று) அமைப்புக்கூட்டத்தில் பல அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை நிறைவேற்றாத நாடுகளை கூண்டுக்குள் ஏற்றி விசாரிக்கும் வகையில் ஒரு பருவநிலை மாற்றம் குறித்த நீதிமன்றத்தை அமைக்க அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் அல்பாஎக்சிம் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றையும் தென் அமெரிக்க நாடுகள் இணைந்து துவக்கியுள்ளன. பரஸ்பர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் நடப்பதை இந்த நிறுவனம் உறுதிப்படுத்தும்.

கடந்த நூற்றாண்டில் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த தென் அமெரிக்க நாடுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு அணி திரண்டுள்ளார்கள். அமெரிக்காவின் புழக்கடை போன்று தங்கள் நாடுகளை நடத்துவதை இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை அவர்கள் எடுத்துள்ளார்கள். இது வெறும் ஆட்சியாளர்களின் ஆசையல்ல. ஒட்டுமொத்த தென் அமெரிக்க மக்களின் விருப்பமாகும். இதனால்தான் பிரித்து வைக்கும் முயற்சியில் வெனிசுலாவில் யுரேனியம் கிடைக்கிறது என்றவுடனேயே அணுகுண்டு வதந்தியைப் பரப்புகிறார்கள். யுரேனியத்தில் வெனிசுலா விஞ்ஞானிகளே இன்னும் கை வைக்கவில்லை. அதற்குள் ஈரானுக்கு கப்பலில் யுரேனியம் கிளம்பிவிட்டதாக கதை கட்டுகிறார்கள்.

4 comments:

  1. என்ன இருந்தாலும் உங்கள் கம்யூனிசப்பற்று என்னை ஆச்சரியப்படுத்துகிறது !! நமது மாநிலமான, அருணாசல் பிரதேசத்தை பிரதமர் விஜயம் செய்ததற்க்கு சீனா கும்மாளம் போட்டதை பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை, ஆனால் ஏதோ ஒரு கம்யூனிச நாட்டை பற்றி மற்ற நாடுகள் தவறாக பேசியதும் எப்படி பொங்கி எழுகிறீகள்!! வாழ்க உமது கட்சிப்பற்று!!

    ReplyDelete
  2. Dear Gowri,

    Our party does not want to compromise on Arunachal Pradesh. We are very clear that Arunachal is part of India. We do not approve their version on this issue. At the same time, how can one allow a Tibetan government-in-exile in Indian soil ?? Is it not contradictory while discussing this issue ??

    ReplyDelete
  3. And to add,

    You should have charged for not writing on the US Army personnel's intrusion into Indian soil. They had intruded by sitting and also carried weapons in the passenger carrier. And within no time, the aircraft was cleared. What was the action against them..?? They were asked to pay the entry fees...

    ReplyDelete
  4. Mr Ganesh,

    It does not matter a bit whether you are clear or unclear about Arunachal being part of India (or China).

    What matters is that People of Arunachal want to be part of India. The people of every state in India want to be part of Democratic India rather than Theocratic Pakistan or Communist China.

    And people of India have amply proved in last 14 elections that they dont want Communism. Communists have never won more than 9% of Indian Votes in any elections. So we the people of India are quite clear in rejection of Communism and Communist Principles. Now bengal and Kerala people are also joining rest of India in rejection of Communism. The recent bye elections have clearly indicated the same.

    ReplyDelete