Saturday, April 18, 2009

நாம புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...

தொலைபேசி ஒலிக்கிறது
கையில் எடுக்கும் அத்வானி : ஹலோ..

மறுமுனையில் மன்மோகன்சிங் : என்ன அத்வானிஜி... பேப்பர் பாத்தீங்களா...

அத்வானி : ஆமா... நாம ரெண்டு பேரும் இறுக்கமா இருந்ததா செய்தி வந்திருக்கு,..

மன்மோகன்சிங் : நாம சந்தோஷமா சிரிச்சுப் பேசுற மாதிரியா நிலைமை இருக்கு...

அத்வானி : அதான... மூணாவது அணி கானல் நீர்னு சொல்லிப்பாத்தேன்... ஆனா எங்க ஆளுங்களே நம்ப மாட்டேங்குறாங்க....

மன்மோகன்சிங் : சொன்னது நீங்களாச்சே... அப்புறம் எப்புடி நம்புவாங்க....

அத்வானி : சில சமயம் என்னை விட தைரியமா நீங்க பேசுறீங்க...

மன்மோகன்சிங் : எதச் சொல்றீங்க... மாநிலக்கட்சிகளால பிரயோஜனம் இல்லைனு சொன்னதச் சொன்னீங்களா...

அத்வானி : ஆமா... நான் எப்புடி சொல்வேன்... நிதிஷ் குமார் கோவிச்சுக்குவார்... ஏன்... மோடியே கோவிச்சுக்கிட்டாலும் ஆச்சரியமில்லை...

மன்மோகன்சிங் : எங்க கூட இருந்த மாநிலக்கட்சிலாம் கழண்டுருச்சே... திமுக மட்டும்தான் இருக்கு... அவங்களுக்கு வேற வழியில்ல...

அத்வானி : எங்க கூட இருக்குற நிதிஷ்குமாரும் அப்படித்தான்....

மன்மோகன்சிங் : நீங்கமட்டும்னா தேர்தல்ல ஜெயிச்சுரலாம்னு நெனச்சுட்டுருந்தோம்...

அத்வானி : நாங்களும் அப்படித்தான் நெனச்சோம்... ஆனா போற போக்கப்பாத்தா நம்ம ரெண்டு பேருக்குமே கிடைக்காது போலருக்கே...

மன்மோகன்சிங் : ஆமாமாம்... ரொம்ப நாளைக்கப்புறம் நெறய இடங்கள்ல தனியா நிக்குறோம்...

அத்வானி : தனியா நிறுத்திட்டாங்கன்னு சொல்லுங்க...

மன்மோகன்சிங் : உங்களுக்குத் தான் நல்லா தெரியுமே... அதே நிலைமைலதான நீங்களும் இருக்கீங்க... காந்தி சொன்னது நடந்துரும்போல இருக்கு...

அத்வானி : எதச் சொல்றீங்க...

மன்மோகன்சிங் : சுதந்திரம்தான் கிடைச்சுருச்சே... காங்கிரசக் கலைச்சுறலாமேன்னாரு...

அத்வானி : வருண்காந்தி அப்படி எதுவும் சொல்லலியே...

மன்மோகன்சிங் : ஓ... அவருதான் உங்களுக்கு காந்தியா...?? அசல் அகிம்சைவாதியத்தான் புடிச்சுருக்கீங்க..

அத்வானி : டைட்லர், சஜ்ஜன்குமார்லாம் காந்தியோட வாரிசுகள்தானே...?

மன்மோகன்சிங் : ரெண்டு கட்சி முறை வேணும்னு சொல்றது எவ்வளவு வசதியா இருக்கு பாத்தீங்களா... நீங்க என்ன யோக்யம்னு கேட்டுட்டு மாத்தி, மாத்தி பேசிட்டே இருக்கலாம்...

அத்வானி : இந்த முறை அது செல்லுபடியாகாது போலருக்கே...

மன்மோகன்சிங் : அந்த உதறல் இருந்துக்கிட்டே இருக்கு...

அத்வானி : இருந்தாலும் இப்படி நாம பேசுனதுனால இறுக்கம் குறைஞ்சுருச்சு பாத்தீங்களா... நாம புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கன்னு ஒரு ஆட்டமே போடலாம் போலருக்கு... ஆனா பிரதமர்தான் ஆகப்போறதில்லை... வேட்பாளர் பதவியும் பறிபோயிருமே...

மன்மோகன்சிங் : மக்கள் பிரச்சனயப் பத்தி பேசுனாதான் இறுக்கம் கூடிருது...

அத்வானி : கிழடு, பொம்மை, ராமர் கோவில்னு பேசிக் கழிப்போம்...
( இறுக்கம் குறைகிறது. தொலைபேசியை இருவரும் வைக்கிறார்கள்.)

No comments:

Post a Comment