Thursday, April 16, 2009

"ஒட்டுமொத்தமா காப்பாத்துங்களேன்..."

தேர்தல் தேதி நெருங்க, நெருங்க எத்தகைய பிரச்சார உத்திகளைக் கடைப்பிடிக்கலாம் என்பதை விவாதிக்க திமுக வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வேட்பாளர்களோடு அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆர்க்காடு வீராசாமி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மு.க.ஸ்டாலின்: என்ன நிலைமை மோசமாயிருக்கோ...?
டி.ஆர்.பாலு : ஆமா... டி.வி. கொடுத்தீங்க... கரண்ட் என்னாச்சுன்னு பிடி, பிடின்னு பிடிச்சுக்குறாங்க...
ஆர்க்காட்டார் : டி.வி. பாக்காத வரைக்கும் நல்லது... இல்லைனா டி.வி.யோட லட்சணம் தெரிஞ்சுருமே... நம்ம நலனுக்காகத்தான் கரண்ட் கட் பண்ணிருக்கோம்...
மு.க.அழகிரி : நான் கூட நம்ம பிரச்சாரத்துக்கு இவ்வளவு கூட்டம் வந்துருக்கே... ஜெயிச்சுருவமான்னு கேட்டேன்... அப்படில்லாம் இல்லை... கரண்ட் இல்லை... எல்லாரும் காத்து வாங்க வெளில நிக்குறாங்கன்னு சொன்னாங்க...
ரித்தீஷ் : என்னோட படத்த தொடர்ந்து போட்டா மக்கள் சந்தோஷமா இருப்பாங்க... எல்லா டி.வி.லயும் போடலாம்... செலவ நானே ஏத்துக்குறேன்... ஆனா கரண்ட் இருந்தாதானே பாப்பாங்க...
ஆர்க்காட்டார் : உங்க படத்த தொடர்ந்து மூணு நாள் போட்டா நீங்க நிச்சயமா ஜெயிச்சுருவீங்க...
ரித்தீஷ் : உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி...
ஆர்க்காட்டார் : எம்.பி.யாயிட்டா இப்புடி படத்துல நடிச்சு கொடுமைப்படுத்த மாட்டார்... அதனால ஓட்டுப்போட்டு டில்லிக்கு அனுப்பிருவோம்னு முடிவு பண்ணிருவாங்க... ஆனா மத்த தொகுதிலாம் போயிருமே...
மு.க.அழகிரி : நான் கலைஞர் மகன் வந்துருக்கேன்...
தயாநிதி(போட்டிக்கு) : நான் கலைஞர் பேரன் வந்துருக்கேன்...
மு.க.ஸ்டாலின் : என்ன செய்யலாம்னு கேட்டா பிரச்சாரத்துக்கு ஒத்திகை பாத்துட்டுருக்கீங்களே...
நெப்போலியன் : என்னோட சினிமா டயலாக்குலாம் தொகுத்து வெச்சுருக்கேன்... அத எடுத்து விடலாமே...
ஆர்க்காட்டார் : கரண்ட்ட ஞாபகப்படுத்துற மாதிரியில்லாம பாத்துக்குங்க...
நெப்போலியன் : இழவு விழுந்தா நான்தான் பொணமா இருக்கணும்...கல்யாண வீடுன்னா நான்தான் மாப்பிள்ளை...
தயாநிதி : பொணம் அது, இதுன்னு பேசாதீங்க... நாங்களே மதுரை ஆபீஸ் தாக்கப்பட்டத மறந்துட்டோம்...
ஆ.ராசா : புலிகள்....
மு.க.ஸ்டாலின்: புலிகள் பிரச்சனையெல்லாம் தலைவர் பாத்துக்குவாரு... நீங்க விட்டுடுங்க...
ஆ.ராசா : தளபதி... நான் அதச்சொல்லலை... புலிகள் காப்பகம் திட்டத்துனால பாதிப்பு இருக்குமாம்...
ஆர்க்காட்டார் : நாம காப்பாத்திருவோம்னா நம்புறாங்க... நம்மளத்தவிர யாரயும் காப்பாத்திருவோம்னு நம்பிக்கை வர்ற மாதிரி இதுவர நாம நடந்துக்கலையே...
ஜெகத்ரட்சகன் : என்னைக் காப்பாத்துவீங்கன்னு வேட்பாளர் பட்டியல் அறிவிச்ச பிறகுதான் தெரிஞ்சுது...மற்ற வேட்பாளர்கள் : ஒட்டுமொத்தமா எல்லாரையும் காப்பாத்த முடியாதா... அதுபத்தி பேசுறதுக்குதான இங்க கூடுனோம்...
ஆர்க்காட்டார் : வேணும்னா பேச மாட்டேங்குறோம்... சட்டில இருந்ததான அகப்பைல வரும்... திருமங்கலத்துல செஞ்ச மாதிரி....
('நம்ம "வெட்டு"த்துறை அமைச்சரு நம்ம சொத்தையே வெட்டி விடுற வேலைய ஆரம்பிச்சுட்டாரு...' என்று கூறியவாறு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் வேட்பாளர்கள் அனைவரும்.)

No comments:

Post a Comment