Friday, April 3, 2009

"நான்தான் பிரதமர் வேட்......"

இடம் : புதுடில்லி
அத்வானியின் செய்தியாளர் சந்திப்பு

அத்வானி : வணக்கம். கேள்விகள நீங்க கேட்குறீங்களா... நானே கேட்டுக்கட்டுமா...?

செய்தியாளர்கள் : நீங்க சொல்ற சொல்லுங்க... அப்புறமா கேட்டுக்குறோம்..

அத்வானி : நான்தான் பிரதமர் வேட்....

செய்தியாளர்கள்( இடைமறித்து) : தேர்தல்பத்தி ஏதோ சொல்றதா சொன்னீங்களே...??

அத்வானி : நாங்க ஆட்சிக்கு வந்தாதான் பயங்கரவாதத்துக்கெதிரா பயப்படாம நடவடிக்கை எடுப்போம்..

செய்தியாளர்கள் : காந்தஹார் சம்பவத்துல அடங்கிப்போய் பயங்கரவாதிகள விடுவிச்சதா உங்க மேல குற்றம் சாட்டப்படுதே...

அத்வானி : அந்தப்பயங்கரவாதிகளோட பயப்படாம ஆப்கானி°தான் வரைக்கும் ஜ°வந்த்சிங் போனாரே... இப்புடி பயங்கரவாதிகளோட சரிசமமா உக்காந்துக்கிட்ட போக வேறு யாருக்கு தைரியம் வரும்...

செய்தியாளர்கள் : உறுதியான நடவடிக்கை எடுக்கணும்னு...

அத்வானி : அவங்க என்ன அப்பாவி மு°லீமா... உறுதியா நடவடிக்கை எடுக்க...??

செய்தியாளர்கள் : நீங்கதான் உண்மையான மதச்சார்பற்றவர்கள்னு சொல்லிக்குறீங்களே...

அத்வானி : பின்ன... போட்டிக்கு வந்துறக்கூடாதுன்னு அயோத்திலயே எவ்வளவு கோவில இடிச்சுருக்கோம்... மசூதிய இடிச்சோம்... பைபிளக் கொளுத்திருக்கோம் ... ஒரிசாவுல கன்னியா°திரீ ஒருத்தரயும் எங்க ஆளுங்க பலாத்காரம் செஞ்சாங்களே... மதமா பாத்தோம்...

செய்தியாளர்கள் : குஜராத் அமைச்சர் ஒருத்தர் மேல கலவரம் செஞ்சதா குற்றம் சாட்டிருக்காங்களே...

அத்வானி : அதனாலதான அமைச்சரே ஆனாரு... இப்ப பாருங்க. வருண்காந்தி எவ்வளவு பிரபலமாயிட்டாருன்னு...

(தொலைபேசியில் டிரிங்... டிரிங்...)
ஹலோ... யாரு கணேசன்ஜியா சொல்லுங்க... என்ன அப்புடியா... கூட்டணிக்கட்சிகளுக்கு எப்புடி சீட் ஒதுக்குறீங்க... ஓஹோ... பாஜக(சிபிஆர்) கட்சிக்கு கோவை, பாஜக(ராஜா) கட்சி சிவகங்கை கேக்குது... ஆனா கொடுக்க முடியலையா... ஏன்... ஓ.. சரி.. சரி.. பாரதீய ஜனதா கழகமா... அது என்ன... நம்ம திருநாவுக்கரசர் கட்சியா... அவங்களுக்கு ராமநாதபுரம்... நீங்க எங்க நிக்குறீங்க... எங்க நடுத்தெருவுலயா... ஏன்... ஓ... தெருமுனைல கூட்டமா... இன்னும் எத்தனை சீட்ல உடன்பாடு எட்டணும்... சரி... சரி... சீக்கிரம் முடிங்க...
அத்வானி : தமிழ்நாட்டுலருந்து பேசுறாங்க...கூட்டணி வலுவா இருக்காம்...
செய்தியாளர்கள் : அங்க ஒரு சீட்டுகூட கிடைக்காதுன்னு சொல்றாங்களே...
அத்வானி : அதெல்லாம் பொய்ப்பிரச்சாரம்... போன தடவ எவ்வளவு வாங்குனோமோ அதை விடக்கூடவும் மாட்டோம்.. குறையவும் மாட்டோம்...

செய்தியாளர்கள் : போன தடவ ஒரு எம்.பி.கூட அங்க கிடையாதே...

(கவனிக்காதவர் போல் தொலைபேசி எடுத்து டயல் செய்யத் துவங்கினார் அத்வானி)

அத்வானி : ஹலோ... யாரு.. வெங்கய்யா நாயுடுவா...

(மறுமுனையில்) வெங்கய்யா நாயுடு : ஆமா அத்வானிஜி... சொல்லுங்க...

அத்வானி : எப்படி இருக்கு நிலைமை..??

வெங்கய்யா நாயுடு : தனியா இருக்குறதுனால கொஞ்சம் பயமாத்தான் இருக்கு...

அத்வானி : ஏதாவது ரெண்டு கட்சிய சேத்துக்குங்க... ஆனா நான்தான் பிரதமர்வேட்பாளர்னு ஒப்புக்கணும்...

வெங்கய்யா நாயுடு : அதச் சொல்லலீங்க... இங்க நம்ம ஆபீ°லதான் இருக்கேன்... பக்கத்துல யாருமே இல்லீங்க... தனியா இருக்கேன்... அந்தப்பயத்த சொன்னேன்...(தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது)

அத்வானி : என்ன கேட்டீங்க...

செய்தியாளர்கள் : தேர்தல் அறிக்கை வெளியிட ஏன் இவ்வளவு நாளாச்சு... முதல் கட்டத்துக்கு பாதிப்பிரச்சாரம் முடிஞ்சு போச்சே...

அத்வானி : எங்க இணையதளம் பாத்தீங்களா.. அதுலருந்து எடுத்துருக்கலாமே...?

செய்தியாளர்கள் : அதுல உங்க பேரத்தவிர வேற எதுவும் இல்லையே...

அத்வானி : ஹை... பின்ன வேற எதையும் போட்டா என்னைக் கண்டுக்க மாட்டீங்களே...

செய்தியாளர்கள் : தேர்தல் அறிக்கை பத்தி ஏதாவது சொல்றீங்களா...?

அத்வானி : நான்தான் பிரதமர் வேட்...

(செய்தியாளர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்)

கற்பனை : கணேஷ்

2 comments:

  1. tamilnadu government vs china government
    http://tinyurl.com/cn49km

    ReplyDelete
  2. கலக்கல்.

    வெங்கையா போன் சூப்பர்.

    ReplyDelete