Tuesday, February 9, 2010

சர்க்கரை சாப்பிடாததால் இறக்க மாட்டீர்கள்!


சர்க்கரை சாப்பிடாததால் யாரும் இறப்பதில்லை!

தேசியவாத காங்கிரசின் "புதிய கண்டுபிடிப்பு"!


சர்க்கரை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வதே சர்க்கரை விலையுயர்வைச் சமாளிப்பதற்கான தீர்வு என்று கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ராஷ்டிரவாதியின் தலையங்கம், சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் யாரும் இறந்து விடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


விலைவாசி உயர்வு குறித்து நாடே விவாதித்து வருகிறது. இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. முதலில் மத்திய அரசில் உள்ள எல்லோரும் சேர்ந்த மாநிலங்கள்தான் காரணம் என்றனர். அது எடுபடாததால் விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரைக் குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் தொடுத்தனர். அவரும் பதிலடிக்கு பிரதமரும்தான் விலையுயர்வுக்குப் பொறுப்பு என்றவுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது நின்றது.


தற்போது தேசியவாத காங்கிரஸ் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளது. தங்கள் பத்திரிகையான ராஷ்டிரவாதி தலையங்கத்தில் சர்க்கரை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. மேலும், இனிப்பான பொருட்களைச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும். ஒவ்வொருவரும் சர்க்கரையை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அந்தத் தலையங்கம் சொல்கிறது.


இவ்வளவு சொல்லியும் சர்க்கரையை வாங்க கடைக்குச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் தேசியவாத காங்கிரசுக்கு வந்துவிட்டது போலும். அதிகமான சர்க்கரை அல்லது உப்பு எடுத்துக்கொள்வது விஷத்தை உண்பதற்கு சமம் என்று மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு போடு போட்டுள்ளது.எதிர்க்கட்சிகளிடமிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


பத்திரிகையின் தலையங்கத்திற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்படிப் பத்திரிகை இருப்பதே எங்களுக்குத் தெரியாது என்று கூட சொன்னாலும் சொல்வார்கள் என்று எதிர்க்கட்சியினர் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

4 comments:

  1. 65% of sugar production is consumed by industrial sugar users.They are the bulk users.they purchase it at concessional rates. they prepare chocolets,confectionary items,sweets etc.The N.C.C is the political wing of the sugar loby and not of the sugar farmers.....kashyapan.

    ReplyDelete
  2. இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட இங்கே அழுத்துங்கள்:
    http://www.clixofchange.com/index.php?ref=kaviyan

    ReplyDelete
  3. sakkaraiyil ivvalavu pirachchanai ullatho. nallathu. muthalaamavar sonnathu pol sakkarai chocolate company kalukku maaniyaththil kitaippathaal saamaniyarkalukku maani thaan. athunaala sakkarai marappathu nallathu . sapaas aalum congress vathikal.

    ReplyDelete
  4. The article about sugar that you have mentioned, must have been published under the "jokes" category !! I appreciate your effort in bringing such comedies out to us all.

    ReplyDelete