Tuesday, February 16, 2010

இலக்கிய விருதுகள் தனியார் மயம்?



சாகித்ய அகாடமி சார்பில் ஏற்கெனவே இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து தாகூர்-சாம்சங் இலக்கிய விருது என்ற பெயரில் விருதுகள் தருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


எட்டு மொழிகளில் இலக்கியத்திற்கான விருதுகளை தாகூர்-சாம்சங் விருது என்ற பெயரில் கடந்த மாதம் வழங்கினர். குடியரசுத்தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தென் கொரிய ஜனாதிபதியின் துணைவி கிம் யூன்-ஓக் இந்த விருதுகளை வழங்கினார்.


ஏற்கெனவே சாகித்ய அகாடமி சார்பில் விருதுகள் தரப்படும்போது சாம்சங்கை இணைத்துக் கொண்டு விருதுகள் வழங்க வேண்டிய அவசியம் ஏன் என்று பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.


முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி எழுத்தாளர் அமைப்புகளும் இணைந்து இந்த தனியார் மயமாக்கலுக்கு எதிராக தில்லியில் கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளன.


இந்தி எழுத்தாளர் உலகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதால், பிரபல எழுத்தாளர்களான நம்வார் சிங், மேனேஜர் பாண்டே, கிருஷ்ணா சோப்டி, அல்கா சரோகி மற்றும் வீரேந்திர டாங்வால் ஆகியோரும் இடதுசாரி அமைப்புகளோடு இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.


எவ்வாறு விருதுகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். கேட்டால் இலக்கியத்துறையில் திறமையானவர்களைக் கவுரவிப்பதற்காக இந்த விருதுகளை வழங்குகிறோம் என்று சாகித்ய அகாடமியினர் கூறுகிறார்கள்.


25 மொழிகளில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறதே.. அதைப் பெறுபவர்களும் தகுதியானவர்கள்தானே என்று மூத்த எழுத்தாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

1 comment:

  1. It is shame that MNCs are using the names of anti imperialist icons like Tagore for their publicity purposes. In future some more awards like VOC-Walmart,Thilagar-coke may be announced if it is not resisted. It is pity that our writers are running after awards throwing values in the wind.It is patriotic duty of every WRITER to react against subjecting intelligentsia at the feets of MARKET.

    ReplyDelete