Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts
Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts

Friday, April 29, 2011

புருலியாவில் ஆயுதம் வீசிய சதி அம்பலம் !

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசின்மீது பழிசுமத்தி எப்படி யேனும் வீழ்த்தவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, அம்மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத் தில் பெருமளவில் மர்மமான முறையில் ஆயுதங்கள் குவியல் குவியலாக வீசப்பட்ட சம்பவத் தில் முதன்மைகுற்றவாளியான கிம் டேவி என்பவர், தற்போது இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம் என்றும், இதுகுறித்து இந்திய அரசுக்கு அனைத்துவிவரங்களும் முதலி லேயே தெரியும் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அரசியல் அரங்கில் கிம் டேவியின் இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன் னணி அரசுக்கு எதிராக செய்தி கள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறை யில் இறக்குமதி செய்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்றுகுவித்துவருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழு வதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர் களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப் பிற்காக தீவிரவாத குழு வைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன் மை குற்றவாளிகளான மேற் கண்ட இருவரும் இந்தியாவிலி ருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு நிர்வாகமே ஏற்பாடு செய்தது. புருலியா ஆயுத வீச்சு சம்பவத் திற்குப்பின்னால், இடதுமுன் னணி அரசுக்கு எதிராக மம்தா வின் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாவோயிஸ்டுகளின் உதவியுடன் ஏராளமான முயற்சி களை செய்தவண்ணம் இருக் கின்றனர்.

இந்தப்பின்னணியில், 15 ஆண்டுகளுக்குப்பின்னர், புருலியா ஆயுத வீச்சு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு உண்மைகளை, இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபருக்கு அளித்த நீண்ட பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கில் தற்போது இந்தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என்றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு நாச காரியத்திற்காக சிலர் தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம் டேவி, இந்தப்பின்னணி யிலேயே உண்மைகளை வெளி யிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டி ருக்கிறார்.

புருலியாவில் ஆயுதம் வீசுவ தன் மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப் பில் ஈடுபடுகிறது என்ற பிரச் சாரத்தை நடத்தி, அதன்மூலம் அங்கு குடியரசுத்தலைவர் ஆட் சியை அமல்படுத்திவிட முடியும் என்ற எண்ணத்துடன், அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்திக்கொண்டன என்று கிம் டேவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உலகம் முழுவதும் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றி இருப்பதாகவும் கிம் டேவி கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.


Monday, October 12, 2009

தெற்கில் மீண்டும் வட்டமிடுகிறது அமெரிக்கக்கழுகு!




ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பில் பெரும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மீண்டும் தென் அமெரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தென் அமெரிக்காவின் அரசியல் சூழல் பெரிதும் மாறியுள்ளது. வெனிசுலா முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் வெனிசுலா கண்டுள்ள வெற்றி மற்ற தென் அமெரிக்க நாடுகளை உத்வேகப்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் தென் அமெரிக்க அரசுகள் ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் முன்பு இருந்தது போன்ற நெருக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை.

கொலம்பியா மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்ட ஹோண்டுரஸ் ராணுவம் ஆகியவைதான் அமெரிக்காவிற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கின்றன. ஹோண்டுரசின் ஜனநாயகப் படுகொலை அமெரிக்காவின் ஆதரவில்லாமல் நடந்திருக்க முடியாது என்பதுதான் தென் அமெரிக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துவரும் அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும். தென் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து தற்போது ஏற்படுத்தியுள்ள தனியாக வங்கி, தொலைக்காட்சி நிறுவனம், பிராந்திய ரீதியான வர்த்தக ஒப்பந்தங்கள் என்பதெல்லாம் 1990களில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இந்த முயற்சிகளை எடுப்பதில் முன்நின்றன.

இந்த நிலையில்தான் அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகள் தனது கண்களைப் பதித்துள்ளது. கொலம்பியாவில் புதிதாக ஐந்து ராணுவத்தளங்களை அமெரிக்கா அமைக்கிறது. கேட்டால், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று கூறிக்கொள்கிறது. போதைப்பொருட்கள் கடத்தும் நாடுகள் என்று கூறி வெனிசுலாவையும், பொலிவியாவையும் கருப்புப்பட்டியலில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இந்தப்பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் கொலம்பிய ஆகிய இருநாடுகள்தான் அதிகமாக போதைப்பொருட்களை விளைவிப்பதோடு நுகரவும் செய்கின்றன. இடதுசாரிக்கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இருநாடுகள் வெனிசுலா மற்றும் பொலிவியா என்பதே கருப்புப்பட்டியல் தயாரிப்புக்குக் காரணமாகும்.

அதோடு, பிரேசில் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கொலம்பியாவும் ஆமாம் என்று அருகில் அமர்ந்து கொண்டு தலையாட்டுகிறது. அமெரிக்காவிடமிருந்து வாங்காமல் பிரேசில் பிரான்சிடமிருந்தும், வெனிசுலா ரஷ்யாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்குவதால்தான் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. படைப்பெருக்கம் மற்றும் ஆயுதக்குவிப்பு என்று அமெரிக்கா கூறுவதெல்லாம் சொந்த நாட்டு மக்களை அச்சுறுத்தி வெளியில் தனது ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொள்ளவே என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகிவிட்டது.

உலகிலேயே அதிகமான நாடுகளில் தனது ராணுவத்தளங்களை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காதான். 46 நாடுகளில் 865 அமெரிக்கத்தளங்கள் உள்ளன. பல நாடுகளில் அதன் அரசுகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இந்தத்தளங்கள் அமைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவிலேயே எல் சால்வடார், ஹோண்டுரஸ், பியூர்ட்டோ ரிகோ, கியூபா, அருபா, கியுராசோ மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் இந்தத் தளங்கள் இன்னும் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு முதன்முறையாக, தென் அமெரிக்கக் கடற்பகுதிகளில் அமெரிக்கக் கப்பற்படை உலாவத் தொடங்கியுள்ளது. அர்ஜெண்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க படைத்தளங்கள் தொடர்பாக ஊசலாட்டம் காட்டுகின்றன.

சொந்த பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வாங்கும் எங்களைப் பார்த்து, கொலம்பியாவில் ஏழு படைத்தளங்களை உருவாக்கத்திட்டமிடும் அமெரிக்கா எப்படி கேள்வி எழுப்பலாம் என்று உரிமைக்குரல் எழுப்புகிறது வெனிசுலா. அமேசான் பகுதிகளின் இயற்கைவளங்களைக் கொள்ளையடிக்கவே இந்தப்புதிய படைத்தளங்கள் என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக்கூட்டத்தில் கொலம்பியாவும் கலந்து கொண்டது. அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த விபரங்களைத் தெரிவிக்குமாறு மற்ற தென் அமெரிக்க நாடுகள் கேட்டபோது அதைத்தர கொலம்பியா மறுத்துவிட்டது. சொந்த நாட்டிற்கு எதிரான அம்சங்கள் அதில் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.