Friday, December 18, 2009

மதுரை இன்னும் அங்கதான் இருக்கா...?


தீர்ப்பு வந்தவுடன் போனால் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்திருந்த பத்திரிகையாளர்கள் சில நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கிறார்கள். தினகரன் ஊழியர்கள் எரிந்து சாம்பலானபோது கொந்தளிப்போடு பேட்டி கொடுத்த கலாநிதி மாறனின் மனநிலை தீர்ப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
பத்திரிகையாளர்கள் : தினகரன் அலுவலகம் தாக்குதல் தொடர்பான தீர்ப்பு வந்துவிட்டதே...?
கலாநிதி மாறன்(உற்சாகமாக) : ஆமாம், நீதி வென்றது.
பத்திரிகையாளர்கள் : அலுவலகம் எரிக்கப்பட்டப்ப நீங்க என்ன சொன்னீங்களா அதுக்கு மாறான தீர்ப்பு வந்துருக்கே...
கலாநிதி மாறன் : நீங்கள் வேண்டுமென்றே எதையோ கிளறுகிறீர்கள்... நானாகவே சொல்லிடுறேன்... உங்க எதிர்பார்ப்பு பொய்யாகிரும்.. நான் கடைசியாக மதுரைக்கு போனது இன்னும் நினைவுல அப்படியே இருக்கு... அப்ப சின்னப்பையனா எங்கப்பாவோட விரலைப் புடிச்சுக்கிட்டே போனேன்...அதுக்கப்புறம் மதுரைய பாக்கவே இல்லை... தெற்குப்பகுதிலதான இருக்கு..
பத்திரிகையாளர்கள் : இன்னும் அங்கதான் இருக்கு...நாங்க அதக் கேக்க வரல...
கலாநிதி மாறன் : பின்ன என்ன கேக்கப்போறீங்க... தினகரன்னு சொல்றீங்களே... அப்படி ஒரு பத்திரிகையே இல்லை..அது நின்னு போய் பல வருஷம் ஆச்சு... இதெல்லாம் நீங்க கௌப்பி விட்டதுதான...
பதறிப்போன பத்திரிகையாளர்கள் தயாநிதி மாறனிடமாவது கேட்கலாம் என்று அவரைத் தேடினார்கள். அவர் கோபாலபுரத்தில் இருப்பது தெரிந்து "ஆஹா... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம். கலைஞரிடமும் அப்படியே கேட்டு விடலாம்" என்று அங்கு படையெடுக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி : என்ன... பத்திரிகை அன்பர்கள்லாம் சேந்து வந்துருக்குற மாதிரி இருக்கே.. உங்களுக்கு தொந்தரவு வேணாம்னுதான நானே கேள்வி கேட்டு பதில் தந்துட்டு இருக்கேன்...
பத்திரிகையாளர்கள் : நாங்க கலாநிதி மாறன் வீட்டுல இருந்து வர்றோம்...
கருணாநிதி : இப்பதான் கண்மணி மாறனின் அன்புச் செல்வத்துக்கிட்ட இருந்து அழைப்பு வந்தது... நானும் கேள்விப்பட்டேன்...
பத்திரிகையாளர்கள் : என்ன கேள்விப்பட்டீங்க...
கருணாநிதி : தினகரன் பத்திரிகை நின்னு போய் ரொம்ப நாளாச்சுன்னு...
பத்திரிகையாளர்கள் : உறுதியாச் சொல்றீங்களா...

கருணாநிதி : இதுல என்ன இருக்கு... இந்த விஷயத்துல மேற்கு வங்கத்துல என்ன நிலைமையோ அதுதான் இங்கயும்...
அப்போது அங்கிருந்த மத்திய அமைச்சர் தயாநிதிமாறனும் தலையிட்டார், "நாங்க சொல்றத நம்பலைன்னா வெளியில தினகரன் நிருபர் நிக்குறாரு... அவர்கிட்டயே கேட்டுக்குங்க... அப்படியும் நம்பலைன்னா ஒண்டிக்கு ஒண்டி வர்றீங்களா..."
திடீர்த் தாக்குதலால் அதிர்ந்து போய்க் கலைஞரை நோக்கித் திரும்பினார்கள் பத்திரிகையாளர்கள்.
கருணாநிதி : ஒன்றும் கவலைப்படாதீர்கள். பெரியார் மற்றும் அண்ணாவின் தம்பியாகிய நானே உங்கள் மனநிலையை எடுத்துரைப்பேன். யாரிடம் எடுத்துரைப்பேன். முதல்வராகிய என்னிடமே எடுத்துரைப்பேன்...
எல்லாரும் ஒரே மாதிரியா கூட்டு சேந்துட்டாங்கன்னு சொல்லிவிட்டு ஓடுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
*******

3 comments:

  1. சிறப்பான கற்பனை. நல்ல களம் தேர்வு. ஆனால், இன்னும் கொஞ்சம் ஆழமான துருவல்களைச் செய்ய வாய்ப்பிருந்திருக்கும் என்றே படுகிறது. அரசியல் பகடியில் முன்னணி பத்திரிகையாளராக யாரும் தென்படாத காலம் இது. தீவிர முயற்சிக்கு நீங்கள் இறங்கலாம்.

    வாழ்த்துக்கள்

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. People have all good words about our judicial system. But unfortunately courts can judge based on what evidences say and evidences can be arm twisted/threatended/bull dozed by political parties. If a Police officer who was at the witness scene near Dinakaran office at the time of the attack back tracks, I can only pity other witnesses. Does the Maran family ever think about those who worked for them in the press and lost their lives ?? Well - they are in the field of making money - not for showing mercy. Vazhga Jana-nayagam. Vazhga namadhu saakadai aarasiyal !!

    ReplyDelete