Wednesday, December 10, 2008

ரஜினியைச் சீண்டும் இல.கணேசன்!

ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் வரவேற்போம் என்று பாஜகவினர் அவர்களாகவே பத்திரிகைகளுக்கு சொல்லி வந்தனர். அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. "சினிமாவில் அதிக ஆர்வமுள்ள" எல்.கே.அத்வானி நேரிலேயே சென்று ரஜினிகாந்தைச் சென்று சந்தித்தும் பலனில்லாமல் போய்விட்டது.

இடதுசாரிக் கட்சிகளுடன் அதிமுக தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்ளப்போகிறது என்று முடிவானதிலிருந்து தமிழக பாஜகவினரின் பதற்றம் அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட தென்னிந்தியாவில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பை இடதுசாரிக்கட்சிகள் உருவாக்கியுள்ளன என்று வடஇந்தியப் பத்திரிகைகள் எழுதத் துவங்கியுள்ளன.

தேமுதிகவுடன் சேருவோம், உறவு குறித்து முடிவு செய்யப்போகிறோம் என்றெல்லாம் வரிசையில் யாருமே காத்திராமலேயே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக்கோபத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் மீதும் பாய்ந்துள்ளார். "பாஜவுக்கு ஆதரவாக ரஜினி வாய் கொடுக்கலாம். அதற்கு ஆண்டவன் அவருக்கு கட்டளையிட வேண்டும்" என்று நக்கலாக அவரை சீண்டியுள்ளார்.

அதோடு நில்லாமல் ராமனும், அனுமனும் எங்களோடு துணை நின்றால் போதும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். இவர் இந்தியாவின் தென் கோடியில் நின்று கொண்டு இதைச் சொல்லிக்கொண்டிருந்த அதே வேளையில், டில்லி சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தின்போது 'சேதுசமுத்திரத்திட்டத்தை வரவிடமாட்டோம்' என்று கூறியதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இது மதரீதியான பிரச்சாரம் என்று நறுக்கென்று குட்டு வைத்துள்ளது. யாருமே கிடைக்காததால்தான் ராமனும், அனுமனும் போதும் என்று ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிட வேண்டாம் என்று கருதி ஓரளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. தங்கள் வாழ்வில் ஒருபோதும் விலையைக் குறைத்ததேயில்லை என்பதால் இதற்கு எதிராகவும் பாஜக குதிக்கிறது.
சர்வதேசச் சந்தையில் கடுமையான விலை குறைந்துள்ளபோது, இந்த விலைக்குறைப்பு போதாது மக்கள் குரல் எழுப்பிவரும் வேளையில் விலையைக் குறைத்திருக்கக்கூடாது என்கிறார் இல.கணேசன்.

அதிகாரப்பசி எந்த அளவுக்கு மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு உதாரண புருஷர் என்ற பட்டத்தை விரைவில் இல.கணேசன் பெற்றாலும் ஆச்சரியமில்லை.

No comments:

Post a Comment