Tuesday, August 25, 2009

விலை உயர்ந்தால் கொண்டாட்டம்!


கரும்பு விளைச்சல் இல்லை. சர்க்கரை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதன் விலை கடுமையான ஏற்றத்தைச் சந்திக்கும். இந்தச் செய்திகள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆனால் பங்குச்சந்தை சூதாட்டக்காரர்கள் உற்சாகக்குரல் எழுப்புகிறார்கள்.

எந்தப் பங்கில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லும் பங்குச்சந்தைப் பொருளாதாரப் புலிகள், சர்க்கரை நிறுவனங்களின் பங்குகளில் எது குறைவான விலைக்கு விற்கிறதோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள். கோடிக்கணக்காக சாமான்ய மக்களின் வாழ்வில் அதிர்வை ஏற்படுத்தும் அத்தியாவசியப் பண்டங்களின் விலையுயர்வு சூதாட்டக்காரர்களின் களமாக மாறி விடுகிறது.

சர்வதேச அளவில் நிலைமை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தைப் புள்ளிகள் அதிகரிப்பு என்று செய்தி. அதற்கான காரணமும் எழுதுகிறார்கள். சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை அதிகரித்ததாம். சாமான்ய மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு எகிறிப்போயுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணமான பெட்ரோல் விலை மேலும் உயர்ந்தால் பங்குச்சந்தையும் நிமிர்கிறது. ஆனால் சாமான்ய மக்களைப் படுக்க வைத்து விடுகிறது.

No comments:

Post a Comment