Wednesday, August 5, 2009

மார்க்சிஸ்டுகளை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?


கடந்த இரு ஆண்டுகளில் மேற்கு மிட்னாப்பூர், புருலியா மற்றும் பங்குரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 100 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது அனுப்பப்பட்டுள்ள 50 துணைராணுவப் பிரிவுகளும் கூட அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாவோயிஸ்டுகளை வெளியேற்றும் நடவடிக்கை துவங்கிய பிறகும் கூட எட்டு மார்க்சிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரைக்கூட குறிவைக்காமல் மார்க்சிஸ்டுகளை மட்டுமே தங்கள் இலக்காக மாவோயிஸ்டுகள் வைத்துக் கொள்வது ஏன்? மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான பிகாஷ் என்பவர் கூறுவதை நம்புவதாக இருந்தால், மார்க்சிஸ்ட் கட்சியினர் அனைவருமே காவல்துறைக்கு தகவல் தருபவர்களாக இருப்பவர்கள்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் லால்கருக்கு துணை ராணுவப்படையை அனுப்பியுள்ளது. திரிணாமுல் அந்த அரசில் அங்கம் வகிக்கிறது. இருந்தாலும், காவல்துறைக்கு இந்த இருகட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாவோயிஸ்டுகள் பற்றிய தகவல்களை ஏன் தருவதில்லை என்பது மர்மமாகவே இருக்கிறது. தங்கள் எதிரியின் எதிரியை மாவோயிஸ்டுகள் நண்பர்களாகக் கருதுகிறார்கள் என்பதுதான் சரியான விளக்கம்.
- மெயில் டுடே நாளிதழ்(ஆக.4)

No comments:

Post a Comment