Saturday, August 22, 2009

புதிய வரிக் கொள்(ளை!)கை



2011ல் நடைமுறைக்கு வரப்போகும் புதிய வரிக்கொள்கையின் வரைவு நகல் சுற்றிற்கு விடப்பட்டுள்ளது. இதன் மீது கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் அதைப் பதிவு செய்து கொள்ளலாம். உயர்தர மக்களுக்கு எக்கச்சக்க சலுகைகளை வாரி வழங்கும் இந்தக் கொள்கை அந்தச் சலுகைகளை சரிக்கட்ட நடுத்தர மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்காக தண்ணீர் தெளித்துள்ளது.
சம்பளத்தோடு கிடைத்து வந்த இதுவரை வரிக்குட்படாத சலுகைகள், ஓய்வுக்காலப்பலன்கள் என்று வரி போடப்படும் பட்டியல் நீளுகிறது. ஊழியர்கள் தங்கியிருக்கும் வீடுகளை அரசோ அல்லது நிறுவனங்களோ அளித்திருந்தால் அந்த வீடுகளுக்கு வருமான வரிக்காக ஒரு வாடகை நிர்ணயிக்கப்படும். வரி கட்டுகிறீர்களோ... வாடகையைக் கட்ட வேண்டாமா என்றும் விரைவில் கேட்கலாம்.

ஓசையின்றி ராணுவத்தினர் கழுத்திலும் கத்தி வைத்து மிரட்டுவது போன்ற விஷயமாகும் இது. அவர்களுக்கு தரப்படும் வீடுகளுக்கும் இது பொருந்துமல்லவா... விலக்கு அளிப்பதற்கான எந்த ஆலோசனையும் அந்த வரைவுக் கொள்கையில் இல்லை.

30 அல்லது 35 ஆண்டுகள் கழித்து அக்கடா..வென்று உட்காரப் போகும்போது ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையை புதிய ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே அரசு ஏற்படுத்திவிட்டது. இப்போது ஓய்வின்போது வரவிருக்கும் பி.எப் மற்றும் கிராஜூவிட்டி ஆகியவற்றிலும் வரி என்ற பெயரில் அரசு கைவைக்கப்போகிறது. சேமிப்பு என்பதையே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கைவிட வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கிறது.

நிறுவன வரியை 25 சதவிகிதமாக்கப் போகிறார்கள். வருமானம் குறையுமே... என்ற சந்தேகமெல்லாம் வேண்டாம். அதுதான் நடுத்தர மக்களின் முதுகில் ஏறிவிட்டார்களே... இனி சவாரிதான்.

No comments:

Post a Comment