Sunday, October 18, 2009

"தேசியவாதி நரகாசுரன்" - கற்பனை



தீபாவளி மலருக்கு சிறப்பு பேட்டி கேட்டு பலரைச் சந்திக்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

வணக்கம். அத்வானிஜி, தீபாவளிக்கு சிறப்பு செய்தியா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

அத்வானி : நான் அப்புடி பாரபட்சமா பாக்குறதுல்லயே... எப்பவுமே சிறப்பு செய்திதான். ஜின்னா, காந்தஹார், ஜஸ்வந்த்சிங்னு தீபாவளி, தசரா பாத்தா கொடுத்தேன்...??

பத்திரிகையாளர் : இருந்தாலும் தீபாவளின்னா மக்கள்கிட்ட ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல...

அத்வானி : ஓ... சரி...சரி.. தீபாவளின்னா நரகாசுரன்தான் நினைவுக்கு வர்றாரு...

பத்திரிகையாளர் : இயல்புதான... எல்லாருக்குமே நினைவுக்கு வருவாரு...

அத்வானி : அது வேற... என்னோட பார்வை வேற... நரகாசுரன் ஒரு தேசியவாதி.

பத்திரிகையாளர் : அப்படியா... சொல்லவே இல்லை...

அத்வானி : அதான் சொல்லிட்டனே... அவரு சமாதி எங்கருக்குனு தெரியாது. தெரிஞ்சா பெரிய மாலை ஒண்ணு வெச்சு தீபாவளி அன்னிக்கு அஞ்சலி செலுத்தலாம்...

பத்திரிகையாளர் : உங்க கட்சிக் கொள்கைக்கு எதிரா போற மாதிரில்ல இருக்கு...

அத்வானி : கட்சியா... அத ஆரம்பிக்குறதயே நான் ஒத்துக்கலை... கட்சி துவக்குறதுக்காக நடந்த கூட்டத்துல நான் கலந்துக்கல...
பத்திரிகையாளர் : இல்லையே... அந்தக்கூட்டப் புகைப்படத்துல நீங்க இருந்தது எங்களுக்கு ஞாபகம் இருக்கே...

அத்வானி : ஃபோட்டோவுல இருப்பேன்... ஆனா கூட்டத்துல இல்லை..

பத்திரிகையாளர் : தீபாவளி அதுவுமா சிறப்பா ஏதாவது பேட்டி கொடுப்பீங்கன்னு பாத்தா விவகாரமால்ல போகுது...

அத்வானி : தீபாவளி கொண்டாடுறதயே நான் ஒப்புக்கலை.. தெரியுமா...

அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்த பத்திரிகையாளர் மன்மோகன்சிங் முன்னால் மூச்சிரைக்க போய் நின்றார்.

(கவலையுடன் காட்சியளிக்கும் மன்மோகன்சிங்) : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் :தீபாவளிக்கு ஒரு சிறப்பு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன். நீங்க கவலையா இருக்குற மாதிரி இருக்கே...

மன்மோகன்சிங் : ஆமா... தீபாவளி அன்னக்கி எல்லாரும் அணுகுண்டு வெடிப்பாங்களே... ஒபாமா ஏதாவது நினைச்சுப்பாரோன்னு கவலையா இருக்கு...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

மன்மோகன்சிங் : ஒரே கோரிக்கைதான்... அணுகுண்டு வெடிய மட்டும் வெடிக்காதீங்கன்னு பெரியவங்க, சின்னவங்கங்களுக்கு கேட்டுக்குறேன்... அமெரிக்க இந்தியர்கள் வெடிச்சுக்கலாம்.. இந்திய இந்தியர்கள் தயவு செஞ்சு வெடிக்காதீங்க... ஒபாமா சர்டிபிகேட் தர மாட்டேன்னு சொல்லிட்டா அவ்வளவுதான்... என்னோட காதல் தோல்விக்கு நீங்க காரணமாயிராதீங்க...

அதற்குள் தொலைபேசி அழைப்பு.

மன்மோகன்சிங் : யாரு... குட்ரோச்சியா.. ஹேப்பி தீபாவளி...(என்று உற்சாகமாகிறார்) ஆமா... கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சின்ன வேலைதான்... உங்கள வழக்குலருந்து விடுவிக்குற வேலை... எவ்வளவு நாளாகிப்போச்சு...(மீண்டும் சோகம் அவரைக் கவ்வுகிறது)

இவர் சோகம் நம்மளத்தாக்கி... ம்..ஹூம்.. தாங்காது.. என்றவாறு நகர்கிறார் பத்திரிகையாளர்.

அடுத்து அவர் சந்தித்தது மத்திய அமைச்சர் அழகிரி. மக்கள் நலத்திட்டங்கள் எல்லாமே அவர் கையால்தான் இப்போதெல்லாம் வழங்கப்படுகிறது. மனுவில் குத்த குண்டுசி வேணும்னு ஒரு பொதுஜனம் கேட்டால்கூட அவரை அழைத்து அவர் கையால் கொடுக்க வைப்பார்கள் என்ற அளவிற்கு போயுள்ளது.

தீபாவளி வருது... விலைவாசி எக்குத்தப்பா ஏறிப்போயிருக்கே.. என்று கண்ணீரும், கம்பலையுமாக நிற்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அரசு இலவச கைக்குட்டையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அழகிரியே கைக்குட்டைகளை வழங்கிக் கொண்டிருந்தார். மேடைக்குக்கீழ் இருந்த கட்சிக்காரர்கள் சிலர், அடுத்தது அமைச்சரே கண்ணீரைத்துடைத்துவிடும் திட்டம்தான் என்றனர்.

பத்திரிகையாளர் : வணக்கம் சார். தீபாவளிக்கு ஏதாவது...

அழகிரி : அது வட இந்தியப் பண்டிகையாச்சே... இப்பல்லாம் வட இந்தியான்னாலே வெறுப்பாதான் இருக்குது... ஏன்னே புரியலை...

பத்திரிகையாளர் : பருவநிலை ஒத்துக்கலையோ...

அழகிரி : பருவநிலை, சூழ்நிலை, கோப்புநிலைனு எல்லாம்தான் ஒத்துக்க மாட்டேங்குது... மதுரைல இருந்தாதான் தெம்பா இருக்குற மாதிரி இருக்கு...

பத்திரிகையாளர் : என்ன சார்... தீபாவளிக்கு யாருமே சிறப்பா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்களே...

அழகிரி : அப்படின்னா பல பேர்கிட்ட கேட்டுகிட்டு கடைசியாத்தான் இங்க வந்தீங்களா...?? (சுற்றியிருந்தவர்கள் பத்திரிகையாளரை நோக்கி பாய்ந்தனர்.)

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிய பத்திரிகையாளர் கமலாலயத்திற்குள் நுiஎழகிறார் பத்திரிகையாளர். கூட்டமாகத் தெரிந்தது. மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் இல.கணேசன்.

பத்திரிகையாளர் : வணக்கம்.. கணேசன்ஜி..

இல.கணேசன் : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பு செய்தி வாங்க வந்தேன்...என்று இழுத்தார்.

இல.கணேசன் : அடடே.. வாங்க.. சிறப்போ சிறப்புதான்... தீபாவளிய ஒட்டி நாடே திரும்பிப்பாக்குற மாதிரி ஒண்ணு செய்யப்போறோம்...

பத்திரிகையாளர் : என்னது அது...இல.கணேசன் : தீபாவளியக் கொண்டாடுற எல்லாரும் எங்க கட்சி உர்ருப்பினர்கலனு அறிவிக்கப்போறோம்...

பத்திரிகையாளர் : அவங்க ஒப்புக்கணுமே...

இல.கணேசன் : ஒப்புக்குறவங்க மட்டும்தான் தீபாவளி கொண்டாடனும்... மத்தவங்கள்லாம் பாகிஸ்தானுக்கு போயிரலாம்... இதக்கண்காணிக்க முத்தாலிக் தலைமைல குழு போட்டிருக்கோம்...

பத்திரிகையாளர் : இதுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்...?

இல.கணேசன் : அதப்பத்தி பேசாம எப்படி இருக்க முடியும்... எங்க கட்சில இருக்கணும்னா பாகிஸ்தானத் திட்டணும்... கட்சில இருந்து வெளியேறணும்னா பாகிஸ்தானப் பாராட்டணும்... இதான் கொள்கை...

பத்திரிகையாளர் : நரகாசுரனக் கொன்னதுக்குதான தீபாவளி கொண்டாடுறோம்...

இல.கணேசன் : நஸ்ருதீன்தான் நரகாசுரன்... எல்லை தாண்டி வந்த ஆள்தான். பேர மாத்திக்கிட்டான்...

இளைப்பாறலாம் என்று வந்த இடத்தில் தலைவலி அதிகமாகி விடுமோ என்ற அச்சத்தில் பத்திரிகையாளர் வெளியேற முயன்றபோது, இருங்க... உறுப்பினர் கார்டு வாங்கிட்டுப்போய் தீபாவளி கொண்டாடுங்க... என்று தடுத்தார் இல.கணேசன்.

அய்யய்யோ... என்னை விட்டுருங்க... சிறப்புப் பேட்டியே வேண்டாம்.. என்றவாறு ஓடுகிறார் பத்திரிகையாளர்.

யார் மீதோ மோதி விடுகிறார். யார் என்று நிமிர்ந்து பார்த்தால் சாட்சாத் நரகாசுரனே நிற்கிறார்.

நரகாசுரன் : என்னைப் பார்த்தால் பயமாக இல்லையா...??

பத்திரிகையாளர் : யார் நீங்க...

நரகாசுரன் : நான்தான் நரகாசுரன்...

பத்திரிகையாளர் : துவரம்பருப்பு கிலோ 100 ரூபாயைத் தொட்டுக்கிட்டு இருக்குற பயங்கரத்த பாத்த மக்கள் உமக்கெல்லாம் இனி பயப்பட மாட்டார்கள்...

நரகாசுரன் : என்ன...

பத்திரிகையாளர் : இதுக்கு மேலயும் இங்க நின்னா ஏதாவது பெரிய ஜவுளிக்கடை வாசல்ல வர்றவங்கள வரவேற்குறதுக்கு நிறுத்திருவாங்க... போறவங்க, வர்றவங்க எல்லாம் காமெடி பண்ணிருவாங்க...
"அய்யய்யோ" என்று அலறியவாறு நரகாசுரன் ஓடுகிறார்.
பத்திரிகையாளர் நிதானமாக நடந்து செல்கிறார்.

1 comment:

  1. "இவர்களை கட்டுப்பாட்டுக்குள்
    வைத்திருக்கும் ,வறுமையால் ,
    இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.
    எனவே, உணவை கெட்டுப்போகும் வரை
    விட்டு வைக்காமல்,
    தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்
    தட்டில் இடுவோமா..?"..............................

    தொடருவோம் வாருங்கள்..

    ReplyDelete