Thursday, October 29, 2009

66வது கொலை விழுந்துவிட்டது!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்து இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 65 பேர் மாவோயிஸ்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்தபோதுகூட ரத்தம் சிந்தாமல்தான் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதில் மேற்கு வங்க மாநில அரசு கவனமாக இருந்தது.

அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் மாவோயிஸ்டுகளின் மீதான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களைக் போல சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து கொலை செய்யப்படுபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அங்கீகரிக்கவோ அல்லது யாராக இருந்தாலும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று பொதுவாகச் சொல்லவோ அவர்கள் தயாராக இல்லை.

இதோ மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 66வது கொலை விழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஊடகங்களின் ஒரு பகுதியினரும் பாரபட்சமாகவே செய்தி வெளியிடுகிறார்கள். ஜார்க்கண்டில் தாக்குதல் நடத்துபவர்கள் மாவோயிஸ்டுகளாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடத்துபவர்கள் பழங்குடி மக்களாம். தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும் ஒரே அமைப்புதான். கண்ணை மூடிக்கொண்டு செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

1 comment:

  1. I do not know whether the State Govt has sought any Central assistance in dealing with this Maoists menace. Whether the State Govt has sought or not - I do not know what stops the Central Govt from handling the Maoists with iron hand !! Whatever the case may be - Maoists and Naxals are no different from Terrorists - and should be dealt in the same manner. They should be killed like bugs. Those who kill innocents and destroy public property are not sane people.

    ReplyDelete