Showing posts with label மாவோயிஸ்டுகள். Show all posts
Showing posts with label மாவோயிஸ்டுகள். Show all posts

Thursday, October 29, 2009

66வது கொலை விழுந்துவிட்டது!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்து இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 65 பேர் மாவோயிஸ்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்தபோதுகூட ரத்தம் சிந்தாமல்தான் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதில் மேற்கு வங்க மாநில அரசு கவனமாக இருந்தது.

அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் மாவோயிஸ்டுகளின் மீதான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களைக் போல சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து கொலை செய்யப்படுபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அங்கீகரிக்கவோ அல்லது யாராக இருந்தாலும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று பொதுவாகச் சொல்லவோ அவர்கள் தயாராக இல்லை.

இதோ மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 66வது கொலை விழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஊடகங்களின் ஒரு பகுதியினரும் பாரபட்சமாகவே செய்தி வெளியிடுகிறார்கள். ஜார்க்கண்டில் தாக்குதல் நடத்துபவர்கள் மாவோயிஸ்டுகளாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடத்துபவர்கள் பழங்குடி மக்களாம். தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும் ஒரே அமைப்புதான். கண்ணை மூடிக்கொண்டு செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Friday, October 23, 2009

"வளர்ச்சி"க்காக வளர்ச்சியை சிதைக்கும் மாவோயிஸ்டுகள்!



மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக திரண்டுள்ள சில அறிவுஜீவிகள் அந்த வன்முறைகள் நிகழும்போதெல்லாம் மவுனம்தான் சாதிக்கின்றனர். நாட்டிலுள்ள 625 மாவட்டங்களில் 161 மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த மாவோயிஸ்டுகள் கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்துள்ளனர். வளர்ச்சிப்பணிகளை அரசுகள் செய்திருந்தால் இந்த வன்முறைகள் நிகழ்ந்திருக்காதே என்று அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.


வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என்ற மாவோயிஸ்டுகளின் குற்றச்சாட்டு ஒருபுறம். மறுபுறத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை தரைமட்டமாக்கும் வேலையை மாவோயிஸ்டுகள் செய்கின்றனர். ரயில்வே தண்டவாளங்கள், தொலைபேசிக் கோபுரங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், கனிம சுரங்கங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றைத் தகர்த்து எறிகிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய இடங்களைக் குறிவைத்து 183 வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, அந்த மக்களுக்கான பள்ளிக்கூடங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் ஆகியவைதான் இந்த வன்முறைத் தாக்குதல்களின்போது குறிவைக்கப்பட்டன. மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மக்கள் பணத்திலிருந்தே இந்தக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வேலையையே செய்கின்றன.


இவர்கள் தாக்குதல்கள் நடத்தும் பகுதிகளில் நூறு நாள் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சில மாநிலங்களில் இந்தத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் மாவோயிஸ்டுகளால் சிதைக்கப்பட்டன. அரசை ஸ்தம்பிக்கச் செய்கிறோம் என்று இவர்கள் நடத்தும் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகளை இவர்களுக்கு ஆதரவாக இயங்கும் அறிவுஜீவிகள் கண்டுகொள்வதேயில்லை.


இவர்கள் "வளர்ச்சி" என்று சொல்வது மாவோயிஸ்டு அமைப்பின் வளர்ச்சியைப் பற்றியதாக இருக்குமோ...?

Wednesday, July 8, 2009

மாவோயிஸ்டு ஆதரவு நண்பர்களுக்காக...



அது நவம்பர் 13, 2007. இன்று மாவோயிஸ்டுகளைத் தடை செய்வதற்கு மார்க்சிஸ்டுகள் தயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டும் பாஜகவின் தலைவர் அத்வானி தனது தேசிய ஜனநாயகக் கூட்டணித்தலைவர்களோடு இந்தத் தேதியில் நந்திகிராமத்திற்கு சென்றார்.

அங்கு மார்க்சிஸ்டுகள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தி வரும் மாவோயிஸ்டுகள்-மம்தாயிஸ்டுகள்-காங்கிரஸ்-பாஜகவினரின் சார்பில் பல இடங்களில் பேசினார். இவர்களின் ஆதரவாளர்களிடம் குறை கேட்கிறோம் என்ற பெயரில் விஷமப் பிரச்சாரமும் செய்தார். மாவோயிஸ்டுகள் சார்பில் செங்கொடியோடு அவர் சென்ற இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது

Monday, June 22, 2009

கோடிகளில் புரளும் மாவோயிஸ்டுகள்...



மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மாவோயிஸ்டுகள் தங்கள் இயக்கத்தை வர்த்தக நிறுவனம் போன்றே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பல பகுதிகளில் இவர்கள் அடிக்கும் கொள்ளையால் சராசரியாக ஆண்டுதோறும் ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்று கடந்த ஆண்டே பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதோடு, 2007 ஆம் ஆண்டில் மட்டும் அவர்கள் பறித்த பணத்தின் அளவு 1,500 கோடி ரூபாயையும் தாண்டிவிட்டது என்று சத்தீ°கரைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.


மக்கள் யுத்தத்தை நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளை விடுதலை மண்டலங்களாக அறிவித்துக் கொள்கின்றனர். சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்டு, ஆந்திரா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இத்தகைய விடுதலை மண்டலங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தில் அவர்களின் இத்தகைய முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்ததே விடுதலை மண்டலம் உருவாகாததற்குக் காரணமாகும். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருந்த பகுதிகளில் மார்க்சி°ட் கட்சியின் வெற்றியும் அவர்களுக்கு அரசியல் ரீதியாகப் பலத்த அடியைத் தந்தது.


மேற்கு வங்கத்தில் தாக்குதல் நடத்திவிட்டு அருகாமையில் உள்ள ஜார்க்கண்டு மாநிலத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் மாவோயிஸ்டுகளுக்கு வருமானத்திற்கு மட்டும் பஞ்சமே ஏற்படவில்லை. பணம் கிடைக்கிறது என்றால் யாரையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. யாருக்காகப் போராடுகிறோம் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்களோ அத்தகைய ஏழை, எளிய உழைப்பாளிகளின் பாக்கெட்டுகளில் கையை நுழைக்கவும் மாவோயிஸ்டுகள் தயங்குவதில்லை. இரு பெரிய நக்சலைட் அமைப்புகள் இணைந்து செப்டம்பர் 2004ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு) என்ற அமைப்பை உருவாக்கின. கட்சியின் ஒவ்வொரு ஊழியரும் ஆண்டு சந்தாவாக ரூ.10 தரவேண்டுமென்று அப்போது முடிவெடுத்தனர்.
ஆனால் தங்களுக்கு இந்த வருமானம் போதாது என்பதால் அனுதாபிகளிடமிருந்து வசூல் செய்வதோடு, பலவந்தமாகவும் மக்களிடமிருந்து பணம் பறிப்பது என்றும் மாவோயிஸ்டுகள் முடிவு செய்தார்கள். சுற்றுச்சூழல் குறித்து எழுதி வரும் ரிச்சர்டு மஹாபத்ரா என்ற எழுத்தாளர் இதை அம்பலப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், மூங்கில் மரங்களை வெட்டும் ஏழைத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கூலியிலிருந்து ஐந்து ரூபாயை நாள்தோறும் தர வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிர்ப்பந்தப்படுத்தியிருந்தார்கள் என்று குறிப்பிட்டார். புகையிலை பறிக்கும் ஏழைப் பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகள் விட்டுவைக்கவில்லை.


ஆந்திராவில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை நான்கு பிரிவுகளாக மாவோயிஸ்டுகள் பிரித்தனர். பணிகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மொத்த செலவில் பிரிவுவாரியாக எட்டு, ஆறு, நான்கு மற்றும் இரண்டு சதவீத நிதியை மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் தந்துவிட வேண்டும் என்று மிரட்டினார்கள். அதோடு, 2001 ஆம் ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த காகித ஆலையிடமிருந்து மாதாமாதம் 50 லட்சம் ரூபாயை மாவோயிஸ்டுகள் வாங்கியுள்ளனர். மற்றொரு துணி ஆலையிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாயை மாவோயிஸ்டுகள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் என்று ஆந்திரக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.


நாகாலாந்து மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உள்ளிட்டு அனைவரின் ஊதியத்திலிருந்து தீவிரவாதிகளுக்கு பணம் தரப்படுவது போன்றே பீகார் மற்றும் ஜார்க்கண்டு மாநிலங்களில் லெவி வசூலிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் மிரட்டல்களுக்குப் பயந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணம் தந்துள்ளனர். இது போன்ற நிலையை மேற்கு வங்கத்தில் உருவாக்குவதற்கு நடந்த முயற்சிக்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு இருந்ததால்தான் பெரும் வன்முறையை மாவோயிஸ்டுகள் கட்டவிழ்த்து விட்டனர். அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன.