Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Monday, June 29, 2009

எருமை ஓட்டிய ஏரோப்ளேன்...




மார்ச் 2009 கணக்குப்படி ஜெர்மனியில் வங்கிப்பணிகளை மேற்கொள்வதற்கு 441 வங்கிகள் அனுமதி பெற்றுள்ளன. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியில் இந்த வங்கிகளுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. மோசமான முதலீடுகள் என்று ஒரு பட்டியலை இந்த வங்கிகள் தயாரித்து யார் தோள்களில் ஏறிக்கொள்ளலாம் என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மொத்த மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

காந்தி கணக்கு என்று நம் ஊரில் சொல்வார்களே... அதுபோல ஒரு கணக்கைத் துவங்கினால் என்ன என்று அந்த ஊர் சீர்திருத்தவாதிகள் அந்நாட்டு அரசை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த மோசமான முதலீடுகளை தள்ளுபடி செய்து விடுவார்கள். என்ன, பணத்திற்கு எங்கே போவார்களா... இருக்கவே இருக்கிறார்கள் மக்கள். அவர்கள் தலை இப்போது பயன்படாவிட்டால் பிறகு எப்போது பயன்படப்போகிறது...?

இந்த மோசமான முதலீடுகளை அரசுப்பத்திரங்களாக மாற்றி விடுவார்களாம். அதை அந்த வங்கிகள் இருபது ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்த வேண்டுமாம். எருமை ஏரோப்ளேன் ஓட்டிய கதைதான் போங்கள். இப்போதெல்லாம் அடிக்கடி இக்கதையை சொல்கிறார்கள்.