Wednesday, July 21, 2021

இதுதான் சொந்தக் காசுல சூனியமோ..??

(சூனியம் வைத்துக் கொள்வதில் நம்பிக்கை இல்லையென்றாலும், அந்த வார்த்தையை பயன்படுத்தும் சில இடங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.)

ஒரு திரைப்படத்தில் ஒரே நாள்ல பிரபலமாக என்ன வழி என்று வடிவேலு கேட்பார். அதற்கு சரத்குமார் ஒரு ஐடியா கொடுப்பார். கொலைப்பழியிலேயே வடிவேலு மாட்டிக் கொள்வார்.



இதுமாதிரி ஐடியா கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இரண்டு பாஜக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் ஆகிய நான்கு பேரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பாதுகாவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது போதாது என்று நினைத்திருக்கின்றனர். கூடுதல் பாதுகாப்பு, கூடுதல் அந்தஸ்து என்ற திட்டத்துடன் தங்களைத் தாங்களே கடத்திக் கொள்ளத் திட்டம் போட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்பக் மீர் மற்றும் பஷிரத் அகமது ஆகிய இரு பாஜக ஊழியர்கள்தான் இவர்கள். ஒரு இரவில் தாக்குதல் நடந்தது போன்று நாடகம் நடத்தப்பட்டது. ஆனால், இவர்களின் பாதுகாவலர்கள் சுட்ட குண்டு, இஷ்பக் மீரின் கையைத் துளைத்து விட்டது.
விசாரணை நடந்ததில் தாக்குதல் ஒரு நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற நாடகங்களை பாஜகவினர் நடத்தி வந்து அம்பலமாவது தொடர் கதையாகியுள்ளது. இப்போது சிறையில் இருக்கிறார்கள். இதைத்தான் சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்குறதுன்னு சொல்வாங்களோ...
எப்படியோ, பிரபலமாயிட்டாங்க...

No comments:

Post a Comment