Monday, June 28, 2021

அசத்துகிறார்கள், செந்தொண்டர்கள்... 👍

முகநூலில் பார்த்த படம் என்னவோ நினைவில் இருந்து நீங்காமலேயே பல மணி நேரங்கள் இருக்கிறது..,


91 வயது முதியவர் இறந்து விடுகிறார். அவரது குடும்பத்தினர் அங்கு இல்லை. உறவினர்களோ வர விரும்பவில்லை. அவரது உடல் அப்படி இருந்து விடுமோ என்ற அச்சம் நிலவிய சூழலில், பக்கத்தில் குடியிருக்கும் ஒருவர் செந்தொண்டர்களுக்கு அழைப்பு விடுகிறார். 

உடனடியாக அவருடைய வீட்டிற்கு வந்த செந்தொண்டர்கள் அவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று அனைத்து மரியாதைகளுடன் எரியூட்டச் செய்திருக்கிறார்கள். குடும்பத்தினர் இருந்தால் எப்படிக் கவனமாகச் செய்வார்களோ, அப்படிச் செய்தனர்.

அசத்துகிறார்கள்...

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது தொற்று அலை உருவானதிலிருந்து செந்தொண்டர்களின் பணி அளப்பரியதாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். உடல் வெப்பம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை வீடு, வீடாகச் சென்று செய்கிறார்கள். இலவச ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயங்குகின்றன. அவசரத் தேவைக்கு உதவட்டும் என்று அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டினியால் யாரும் வாடி விடாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வதில் அவர்களின் கவனம் இருக்கிறது. ஏழைகளுக்கு உணவு தருவதோடு, மாநிலம் முழுவதும் மிகவும் குறைந்த விலையில் உணவு தயாரித்து வழங்கும் உணவு மையங்களையும் அமைத்துள்ளனர். 

ஒருநாள் அலைபேசி அழைப்பு வருகிறது. ஒருவருக்கு அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. பலரிடமும கேட்டுப் பார்த்து விட்டு, கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நிலைமை மோசமாகி விடுமோ என்ற கவலையுடன் அந்த அழைப்பு வருகிறது. உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு விரைகிறார்கள்,  செந்தொண்டர்கள். 


புகைப்படம் - தி டெலிகிராப்

உயிர் காக்கும் வேலையை உடனடியாகச் செய்ததற்கு குடும்பத்தினர் செந்தொண்டர்களுக்கு நன்றி சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் வேறு யாருமில்லை, அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ரனாகாட் வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சாட்டர்ஜிதான். 

வாழ்த்துக்கள், செந்தொண்டர்களே...👋👋

No comments:

Post a Comment