Saturday, December 18, 2010

பொங்கலுக்கும் வராது காவலன்? ஏகபோகத்தின் பிடியில் தமிழ்த்திரையுலகம்!

ஏற்கெனவே மூன்று முறை தேதி அறிவிக்கப்பட்டு, கடைசியாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 17 அன்று வெளியிட திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலையில் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அப்படக்குழுவினரின் அந்த ஆசையிலும் மண் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் திரையுலகை ஆட்டிப்படைக்கின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் பெரும் அளவில் எழுந்துள்ளது. அப்படி யெல்லாம் இல்லை என்று கூறி இந்தப்படங்கள் எல்லாம் வெளிவரவில்லையா என்று சில படங்களின் பெயர்களைக்கூட அவர்கள் பட்டியலிட்டதுண்டு. வெளிவந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் படங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வர வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

இவர்கள் போடும் பட்டியலில் உள்ள படங்கள் வந்தது உண்மைதான். திரையரங்குகள் கிடைத்தால் போதும் என்று வெளியிட்டு விடுகிறார்கள். தா என்ற படம் வெளியானது. படம் நன்றாகயிருக்கிறது என்பதுதான் பார்த்தவர்களின் கருத்தாகும். ஆனால் ஒரு வாரத்திலேயே படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துவிட்டார்கள். இதுதான் மற்ற படங்கள் வெளியாகும் உண்மை.

டிசம்பர் 17 ஆம் தேதி காவலன் படம் வெளியாவதற்கும் கூட எந்தத்தடையும் இல்லாமல்தான் இருந்தது. நிபந்தனை என்னவென்றால், டிசம்பர் 23 அன்று மன்மதன் அம்பு படத்திற்கு திரையரங்குகள் மாறிவிட வேண்டும். அதாவது, காவலன் படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா, மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் கணக்கில் இல்லை. ஆறு நாட்கள்தான் படத்தை ஓட்ட வேண்டும். அதற்கு இடையூறு பண்ண மாட்டார்களாம்.

பொங்கல் என்று சொல்லிவிட்டார்களே ஒழிய, திரையரங்குகளைக் கேட்டபோதுதான் அவையெல்லாம் கிடைக்காது என்று தெரிந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை, முதல்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இளைஞன், சன் குழுமத்தின் ஆடுகளம், தயாநிதி அழகிரியின் சிறுத்தை ஆகிய படங்கள் வருகின்றன என்பதுதான். இந்தப்படங்கள் வெளியாகாத திரையரங்குகள் வேண்டுமானால் காவலனுக்குக் கிடைக்கலாம். இதோடு மன்மதன் அம்பு படத்தையும் அவ்வளவு எளிதில் திரையரங்குகளிலிருந்து எடுக்க விட மாட்டார்கள். இப்படிப்பார்த்தால் காவலன் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைக்க வேண்டியதுதான்.

பத்திரிகைகளில் வந்துள்ள மற்றொரு செய்தி, திட்டமிட்டே காவலன் படத்தை வெளியிட தடை போடுகிறார்கள் என்று நம்ப வைக்கிறது. காவலன் படத்தை இந்த மூன்று நிறுவனங்களின் ஒன்று கேட்டதாகவும், தர மறுத்ததால்தான் இந்த நெருக்கடி என்பதாகவும் வெளியாகியுள்ள செய்திதான் அது.

1 comment:

  1. Cine field in the hands of one family is well known. But, what service is this movie "Kavalan" going to serve this community? Whether it releases or not - how is a common man affected? Its one business man Vs another. Let them all go to hell. Why to waste our time and efforts on such trivial discussion ??

    ReplyDelete