Tuesday, November 3, 2009

எல்லோரும் கோவிலுக்குள் போகலாமே...??

ஒன்றை உயர்த்திச் சொல்ல வேண்டுமானால் அதைக் கோவில் மாதிரி என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் கோவிலே மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அந்நியமாகிப் போவது நியாயமா... தூரத்தில் நின்று கொண்டு கைகளைக் தூக்கி கும்பிட்டுவிட்டுப் போகும் தலித்துகளின் மனதில் கடவுள் பற்றிய எண்ணங்களை விட தன்னை இப்படித் தள்ளி வைத்துள்ளார்களே என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும்...

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதுமே போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அண்மைக்காலத்தில் இதற்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளன. அண்மைக்காலத்தில் கிடைத்த பலன்களை பட்டியலிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

* அருந்தியர் உள் ஒதுக்கீடு 3 சதம் கிடைத்தது.

* உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக் களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது.

* திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில்;

* திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில்

* நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில்

* பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட் டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில்

* பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வ நாதர் கோவில்

* திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில்

* விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில்

* நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில்ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட் டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன. அக்.27 அன்று சென்னையில் நடைபெற்ற பேரணியில் இந்த வெற்றிகளின் பிரதிபலிப்பு இருந்தது.

அந்தப் பிரதிபலிப்பின் அர்த்தம் இதுதான்...

போராட்டம் தொடரும் என்பதுதான்.

3 comments:

  1. தோ.. கிளம்பிட்டேன் கோயிலுக்கு!
    நல்ல தகவல்...

    ReplyDelete
  2. So a true Communist should now go to temples. Good Riddance !!!

    ReplyDelete
  3. Hello Anony...

    The issue here is discrimination based on the caste... That is all.

    ReplyDelete