Thursday, December 30, 2010

தலித்தா... நாற்காலி கிடையாது, போ...!!

தலித் என்ற ஒரே காரணத்தால் அரசுப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நாற்காலி மறுக்கப்பட்ட அவலம் நேர்ந்துள்ளது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில்தான் இந்தக் கொடுமை.

2005 ஆம் ஆண்டில் பணியில் அமர்ந்த அவர், முதல்நாள் முதல் இன்று வரை தரையில் அமர்ந்துதான் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நாற்காலியில் அவர் அமர்வதை மற்ற ஆசிரியர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் அவர் கடந்த மாதத்தில் புகார் கொடுத்தார்.

அவர் புகாரை ஏற்றுக்கொண்டு தலைமையாசிரியர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். போனவர், திரும்பியும் வந்துவிட்டார். இருப்பினும் ஆதிக்க சாதி மனப்பான்மை கொடிகட்டிப் பறக்கிறது. நாற்காலி தர இன்னும் மறுத்தே வருகிறார்கள். ஆசிரியையின் உரிமைப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1 comment:

  1. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete